சிங்கப்பூரில் காதல் தோல்வியால் வேலைக்கு செல்லாத இளைஞன் செய்த அதிர்ச்சி செயல்
சிங்கப்பூரில் காதலில் தோல்வி அடைந்த இளைஞன் போலியான இறப்புச் சான்றிதழைத் தயாரித்ததற்கான 4,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 29 வயது பரத் கோபால் என்ற இளைஞன் வேலைக்குச் செல்லாமல் இருக்க அதைத் தயார்செய்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது. அண்மையில் காதலில் தோல்வி அடைந்த அவருக்கு வேலைக்குச் செல்ல மனமில்லாத நிலையில் இந்த செயலை செய்து வந்துள்ளார். அவர் 2023ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் திகதி முதலாளியிடம் தம்முடைய தாத்தா இறந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். துக்கம் அனுசரிக்கும் விடுப்பை வழங்குமாறு கோபால் […]













