துருக்கி – மேயர் எக்ரெம் இமாமோக்லு கைது செய்யப்பட்டதற்கு எதிராக இஸ்தான்புல்லில் பெரும் மக்கள் பேரணி
துருக்கியில் மேயர் ஒருவர் சிறைக்கு அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டின் இஸ்தான்புல் நகரில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். துருக்கியில் 10 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் காணப்படாத ஆர்ப்பாட்டங்கள் நடந்துவருவதாகக் கூறப்படுகிறது. துருக்கிய அதிபர் தயிப் எர்துவானின் முக்கிய அரசியல் எதிரியாகக் கருதப்படும் மேயர் எக்ரம் இமாமொக்லு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை (மார்ச் 29) ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலைகளில் திரண்டனர். இமாமொக்லு சென்ற வாரம் தடுத்துவைக்கப்பட்டார். அரசியல் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கவிருக்கும் அவர் பின்னர் சிறைக்கு […]












