இலங்கை – கொத்மலை பேருந்து விபத்து : பயணிகளின் பொருட்கள் காவல்துறையினர் வசம்!
கோத்மலை, கரண்டியெல்ல பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் பயணிகளின் சாமான்கள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பிற பொருட்கள் கோத்மலை காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களின் அடையாளத்தை சரிபார்ப்பதன் மூலம் அவற்றைப் பெறலாம் என்று கொத்மலை காவல்துறைப் பொறுப்பதிகாரி, தலைமை ஆய்வாளர் வஜிர ரத்நாயக்க தெரிவித்தார். விபத்து நடந்த இடத்தில் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் கண்டெடுக்கப்பட்ட 35 மொபைல் போன்கள், சாமான்கள் மற்றும் பிற பொருட்கள் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கொத்மலை காவல்துறைப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார். […]













