இஸ்ரேல் மோதலில் கொல்லப்பட்ட இராணுவத் தலைவர்களுக்கு இறுதி சடங்கு நடத்திய ஈரான் அரசு
இஸ்ரேலுக்கு எதிரான போரில் உயிரிழந்த கிட்டத்தட்ட 60 ராணுவ வீரர்களுக்கு ஈரான், அரசாங்க ஈமச்சடங்கை ஜூன் 28ஆம் திகதி நடத்தியது. இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த அணுவாயுத விஞ்ஞானிகளுக்கும் ராணுவத் தளபதிகளுக்கும் ஈமச்சடங்கு தொடங்கியது. “தியாகிகளைக் கௌரவிப்பதற்கான சடங்கு அதிகாரபூர்வமாகத் தொடங்கிவிட்டது,” என்று அரசாங்கத் தொலைகாட்சி குறிப்பிட்டது. கறுப்பு உடை அணிந்த மக்கள் ஈரானிய கொடிகளை அசைத்தவாறு உயிரிழந்த ராணுவத் தளபதிகளின் புகைப்படங்களைக் கையில் ஏந்தினர். மத்திய டெஹ்ரானில் உள்ள எங்கலாப் சதுக்கத்தில் ஈரானிய கொடிகள் சுற்றப்பட்ட சவப்பெட்டிகளில் […]













