புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

நண்பியின் பிறந்தநாளில் ஜாலி பண்ணும் நடிகைகள்… தமன்னாவா இது??

  • June 29, 2025
  • 0 Comments

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் தமிழில் வெளிவந்த கேடி படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தென்னிந்திய அளவில் வலம் வந்த தமன்னாவிற்கு பாலிவுட்டிலும் தனக்கான இடத்தை உருவாக்கினார். ஹீரோயினாக படங்களில் நடிப்பதை விட ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வந்தார். ஆனால், இவர்கள் இருவரும் […]

இந்தியா

இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே பாகிஸ்தானியர்கள் இருவர் சடலமாக மீட்பு

  • June 29, 2025
  • 0 Comments

இந்திய-பாகிஸ்தான் எல்லை அருகே சிதைந்த நிலையில் இரு உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இரு உடல்களும் ஜெய்சால்மர் மாவட்டத்தில் காணப்பட்டதாகக் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) தெரிவித்தது. 15 வயது சிறுமியின் சடலம் பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட சிம் அட்டையுடன் காணப்பட்டதாக அவர்கள் கூறினர். மற்றொரு சடலம் இளையர் ஒருவருடையது. அவர் 18 வயது ரவிக்குமார் என்பதற்கான அடையாள அட்டையும் பாகிஸ்தான் சிம் அட்டையும் சடலம் அருகே காணப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.அவ்விருவரும் […]

பொழுதுபோக்கு

தனுசை ஓவர்டேக் செய்த விஜய் ஆண்டனி – பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

  • June 29, 2025
  • 0 Comments

விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்து திரைக்கு வந்துள்ள படம் மார்கன். இப்படத்தை லியோ ஜான் பால் இயக்கி உள்ளார். இப்படத்தை விஜய் ஆண்டனி தான் தயாரித்துள்ளார். இப்படத்தில் அஜய் திஷான் என்கிற புதுமுக நடிகர் வில்லனாக நடித்துள்ளார். மேலும் பிரிகிடா, தீப்ஷிகா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு விஜய் ஆண்டனி தான் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நேற்று பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. விஜய் ஆண்டனி கெரியரிலேயே அதிக திரைகளில் ரிலீஸ் […]

மத்திய கிழக்கு

காசாவில் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 81 பேர் உயிரிழப்பு; ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம்

  • June 29, 2025
  • 0 Comments

காஸா மீது இஸ்‌ரேல் நடத்திய வான்வழித் தாக்குல்கள் காரணமாகக் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 81 பேர் உயிரிழந்து விட்டதாக ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) அறிவித்தது. காஸா விளையாட்டரங்கு அருகில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோரில் சிறுவர்களும் அடங்குவர்.இந்தத் தகவலை அல் ஷிஃபா மருத்துவமனை ஊழியர்களும் சம்பவத்தை நேரில் கண்டவர்களும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.அந்த விளையாட்டரங்கில் அகதிகள் கூடாரங்கள் அமைத்து தங்கியதாக பாலஸ்தீன அதிகாரிகள் […]

செய்தி

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டுத் தப்பி சென்றாரா? பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

  • June 29, 2025
  • 0 Comments

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டுத் தப்பிச் செல்லவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டுத் தப்பிச் செல்லவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் சந்தேக நபரைப் பற்றிய சில தகவல்கள் ஏனைய சந்தேக நபர்களின் மூலம் தெரியவந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறுகின்றார்.

விளையாட்டு

கோலியின் இன்ஸ்டா பதிவிற்கு 12 கோடி ரூபாய்

  • June 29, 2025
  • 0 Comments

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலியை இன்ஸ்டாகிராமில் 274 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். இந்தநிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் ஒவ்வொரு பதிவிற்கும் எத்தனை கோடி ரூபாய் கிடைக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி அவர் இன்ஸ்டாகிராமில் எதையாவது பதிவிட்டால் அவருக்கு சுமார் 12 கோடி ரூபாய் (இந்திய ரூபாய்) வரையில் பணம் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோன்று , கிறிஸ்டியானோ ரொனால்டோ, இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டால் அவருக்கு சுமார் 40 கோடி […]

உலகம்

எடை இழப்பு ஊசிகளால் ஆபத்து – அதிகரிக்கும் மரணங்கள் தொடர்பில் எச்சரிக்கை

  • June 29, 2025
  • 0 Comments

எடை இழப்பு ஊசிகளால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த ஊசிகள் உறுப்புகளை அழிக்கும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, பிரிட்டனில் பிரபலமான எடை இழப்பு ஊசிகளால் 100 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன. இறப்புகளில் இரண்டு 20 வயதுக்குட்பட்டவர்களில் இருந்தன. இங்கிலாந்தின் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை நிறுவனம் (MHRA) பெரும்பாலான இறப்புகள் சமீபத்திய ஆண்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட மவுஞ்சாரோ மற்றும் ஓசெம்பிக் […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

உலகின் சிறந்த விமான நிறுவனமாக 9வது முறையாக அறிவிக்கப்பட்ட கட்டார் எயார்வேஸ்

  • June 29, 2025
  • 0 Comments

கட்டார் எயார்வேஸ் 9வது முறையாக உலகின் சிறந்த விமான நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. Skytrax நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த விமான நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. சிங்கப்பூர் எயார்லைன்ஸ் இரண்டாவது இடத்தையும், கேத்தே பசிபிக் மூன்றாவது இடத்தையும் பிடித்தது. எமிரேட்ஸ் நான்காவது இடத்தையும், ANA ஆல் நிப்பான் எயார்வேஸ் ஐந்தாவது இடத்தையும் பிடித்தது. ஆஸ்திரேலிய விமான நிறுவனமான குவாண்டாஸ் எயார்வேஸ் 14வது இடத்தைப் பிடித்தது. எந்த அமெரிக்க விமான நிறுவனமும் பட்டியலில் இடம் பெறவில்லை. 1999 […]

விளையாட்டு

ஸ்மிருதி மந்தனா படைத்த புதிய சாதனை

  • June 29, 2025
  • 0 Comments

முதல் ‘டி-20’ போட்டியில் ஸ்மிருதி மந்தனா சதம் விளாச, இந்திய அணி 97 ரன்னில் வென்றது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் அணி ஐந்து ‘டி-20’ போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று நாட்டிங்ஹாமில் நடந்தது. பயிற்சி போட்டியில் தலையில் காயமடைந்த ‘ரெகுலர்’ கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு, ஓய்வு தரப்பட்டது. கேப்டனாக ஸ்மிருதி மந்தனா பொறுப்பேற்றார். ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் நாட் சிவர், பீல்டிங் தேர்வு செய்தார். ஸ்மிருதி அபாரம் இந்திய […]

செய்தி

இலங்கையில் கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு வெளியான தகவல்

  • June 29, 2025
  • 0 Comments

கடவுச்சீட்டு விண்ணப்பத்தை ஒப்படைப்பதை துரிதப்படுத்துவதற்கும் எந்தவொரு இடைத்தரகருக்கும் பணம் கொடுப்பதனை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. விரைவாக கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்கும் பணம் செலுத்த வேண்டாம் என, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொதுமக்களைக் கோரியுள்ளது. அதற்கமைய, கடவுச்சீட்டுக்காக செலுத்த வேண்டிய கட்டணத்தைத் திணைக்களத்தின் சிறாப்பர் கருமபீடத்தில் மாத்திரம் செலுத்தி, பற்றுச்சீட்டை பெற்றுக்கொண்டு, கடவுச்சீட்டு விநியோக கருமபீடத்தில் மாத்திரம் கடவுச்சீட்டை பெற்றுகொள்ள, நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 2 ஆம் திகதி முதல், பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் […]