சிரியாவின் பல நகரங்கள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்திய இஸ்ரேல்
சிரியா முழுவதும் பல இடங்களை குறிவைத்து இஸ்ரேலிய போர் விமானங்கள் திங்கள்கிழமை இரவு தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அரசு செய்தி நிறுவனமான சனா தெரிவித்துள்ளது. மத்திய சிரியாவின் ஹோம்ஸின் புறநகர்ப் பகுதிகள், லடாகியா கடலோர நகரம் மற்றும் பாலைவன நகரமான பால்மைரா ஆகியவை இலக்கு வைக்கப்பட்ட பகுதிகளில் அடங்கும் என்று அறிக்கை தெரிவித்துள்ளது. நகரங்களில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டன, இருப்பினும் உயிரிழப்புகள் அல்லது சேதத்தின் அளவு குறித்து உடனடி விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. சிரிய வெளியுறவு […]













