உலகம் செய்தி

தென்கொரியாவில் பாதசாரிகள் மீது மோதிய லொறி – 02 பேர் பலி!

  • November 13, 2025
  • 0 Comments

தென் கொரியாவின் புச்சியோன் (Bucheon) நகரில் உள்ள சந்தை தொகுதியில் லொறியொன்று பாதசாரிகள் மீது மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. இதனால் 18 பேர் காயமடைந்துள்ளதாக  தீயணைப்பு மற்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் 60 வயதுடைய அடையாளம் தெரியாத லொறி ஒட்டுநர் ஒருவரை கைது செய்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் தனது வாகனம் பழுதடைந்ததாகவும், பாதுகாப்பு கேமரா காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் ஓட்டுநர் […]

பொழுதுபோக்கு

பெண்களின் உடல் குறித்து தமன்னா கூறிய அந்த தகவல்…

  • November 13, 2025
  • 0 Comments

மில்க் பியூட்டி தமன்னாவை சுற்றி தற்போது பல சர்ச்சைகள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. அதில் ஒன்றுதான் அவர் இளமையாகவும், ஸ்லிம்மாகவும் இருப்பதற்கு ஒரு புதிய காரணத்தை கண்டுபிடித்து கூறுகின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கில் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். தமிழில் விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ், கார்த்தி, ஜெயம் ரவி என பெரும்பாலான நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார். அதே போல் ஒரு சில காதல் சர்ச்சைகளிலும் சிக்கினார். எல்லாம் முடிய கடந்த 2 […]

உலகம்

அமெரிக்காவில் ஒரு வழியாக முடிவுக்கு வந்த அரச முடக்கம்!

  • November 13, 2025
  • 0 Comments

அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட அரசாங்க முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான செலவீன சட்டமூலத்திற்கு காங்கிரஸ் ஒப்புதல் அளித்துள்ளது. பிரதிநிதிகள் சபையில் 222 வாக்குகளை பெற்ற குறித்த சட்டமூலம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கையெழுத்திற்காக அனுப்பிவைக்கப்பட்டது. இதில் ஜனாதிபதி ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ள நிலையில், அரசாங்க முடக்கம் முடிவுக்கு வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போதைய அமெரிக்க நிர்வாகம் அரசாங்க செலவின சட்டமூலத்தை சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு காங்கிரஸிடம் ஒப்புதலுக்காக சமர்ப்பித்தது, ஆனால் ஜனநாயகக் கட்சி தலைமையிலான […]

பொழுதுபோக்கு

ஜி.வி இசையில் பாடிய யுவன்… எந்த படத்தில் தெரியுமா?

  • November 13, 2025
  • 0 Comments

ஒரு இயக்குனரின் படத்தில் இன்னொரு இயக்குனர் நடிப்பது சாதாரணம் தான், அதேபோல் ஒரு இசையமைப்பாளரின் இசையில் இன்னொரு இசையமைப்பாளர் பாடுவதும் இன்று சாதாரணமாகி விட்டது. அந்த வகையில், “பராசக்தி” திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கின்றார். இந்த படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா புதிய பாடல் ஒன்றை பாடியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் – இயக்குநர் சுதா கொங்கரா ஆகியோரின் கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “பராசக்தி”. கடந்த 1960-களில் அப்போதைய மெட்ராஸ் […]

இலங்கை

கொழும்பில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்!

  • November 13, 2025
  • 0 Comments

கொழும்பில் உள்ள காசல் தெரு மகளிர் மருத்துவமனையில் கடந்த 10 ஆம் திகதி இணைந்த இரட்டைப் பெண்கள் பிறந்துள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். பன்னாலையைச் சேர்ந்த 29 வயது தாய்க்கு சிசேரியன் மூலம் இரட்டையர்கள் பிரசவிக்கப்பட்டதாக மருத்துவமனை இயக்குநர் டாக்டர் அஜித் தண்டநாராயணா தெரிவித்தார். குழந்தைகளில் ஒன்று 2.2 கிலோகிராம் எடையும், மொத்த எடை 4.4 கிலோகிராம் ஆகவும் பதிவாகியுள்ளது. இரண்டு குழந்தைகளும் நிலையான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரட்டையர்கள் வயிற்றில் இணைக்கப்பட்டுள்ளனர், மேலும் மூன்று மாதங்களில் […]

இலங்கை

இலங்கையில் 10000 ரூபாயால் அதிகரித்த தங்கத்தின் விலை!

  • November 13, 2025
  • 0 Comments

உலக சந்தையில் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்ததைத் தொடர்ந்து இலங்கையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இதற்கமைய உலக சந்தையில் இன்று   தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 4,212 அமெரிக்க டொலர்களைத் தாண்டியது. இதற்கு ஏற்ப இலங்கையில் தங்கத்தின் விலை இன்று சுமார்   10,000 ரூபாயால் அதிகரித்துள்ளது. அதன்படி, கொழும்பு புறக்கோட்டை தங்கச் சந்தையில் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 310,800 ஆக உயர்ந்துள்ளது, இது நேற்று (12)   301,500 ரூபாயாக  இருந்தது. இதற்கிடையில், நேற்று சுமார்  […]

செய்தி

சிங்கப்பூரில் போலி டிஜிட்டல் அடையாள அட்டை மோசடி குறித்து மக்கள் எச்சரிக்கை

  • November 13, 2025
  • 0 Comments

சிங்கப்பூரில் போலி டிஜிட்டல் அடையாள அட்டைகளை வைத்து புதிய மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாகக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நடைமுறையில் இருக்கும் நிஜமான அடையாள அட்டையைப் போன்றே போலியான அடையாள அட்டைகளை மோசடியாளர்கள் தயாரிக்கின்றனர். அதைக் கொண்டு பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றில் புதிய வங்கிக் கணக்குகளைத் தொடங்க முயற்சிப்பது பிரதானமானது என காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த மோசடி குறித்து அனைத்து வங்கிகளுக்கும் சிங்கப்பூர் நாணய வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, வாடிக்கையாளர்களின் அடையாளத்தை உறுதி […]

இலங்கை

இலங்கையில் தெரு நாய்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு – நெருக்கடியில் மக்கள்

  • November 13, 2025
  • 0 Comments

இலங்கையில் தெரு நாய்களின் எண்ணிக்கை பாரிய அளவில் உயர்வடைந்துள்ளதால் கடும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை விலங்குகள் நலச் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்கமைய, தெரு நாய்களின் எண்ணிக்கை இரண்டு மில்லியன் முதல் மூன்று மில்லியன் வரை அதிகரித்துள்ளதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இந்த அபரிமிதமான அதிகரிப்பால், ஒவ்வொரு வருடமும் சுமார் 250,000 தெரு நாய்க்கடி சம்பவங்கள் பதிவாவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், விலங்கு நலன் மூலம் சமூகப் பாதுகாப்பிற்கான கண்டிச் சங்கத்தின் செயலாளர் […]

ஐரோப்பா

பிரித்தானியாவை அச்சுறுத்தும் இணைய தாக்குதல் – கடுமையாகும் சட்டம்

  • November 13, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் அண்மைக் காலமாக இணையவெளித் தாக்குதல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், அரச சேவைகளைப் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய சட்டங்களைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பிரித்தானிய தேசிய சுகாதாரச் சேவை (NHS) போன்ற அரசாங்க அமைப்புகளுக்கும், தனியார் துறை நிறுவனங்களுக்கும் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் உயர் பாதுகாப்புத் தரங்களைக் கொண்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சு, தேசிய சுகாதாரச் சேவை, மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர், ஜாகுவார் லேண்ட் ரோவர் போன்ற […]

இலங்கை

இலங்கையில் போலி காவல்துறையினர் குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • November 13, 2025
  • 0 Comments

இலங்கையில் காவல்துறை சீருடை அணிந்துகொண்டு மக்களை ஏமாற்றும் போலி நபர்கள் பற்றி கவனமாக இருக்க வேண்டுமென காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இத்தகைய சீருடையில் வீடுகளுக்கு வருகை தருவோரின் ஆள் அடையாளங்களைச் சோதிக்கும் உரிமை மக்களுக்கு உண்டு என காவல்துறை ஊடகப் பேச்சாளரான உதவிப் காவல்துறை அத்தியட்சகர் எவ்.யு.வூட்லர் தெரிவித்தார். வீடுகளுக்கு வருவோரிடம் காவல்துறையின் உத்தியோகபூர்வ அடையாள அட்டையைப் பொதுமக்கள் கேட்க முடியும். சந்தேகம் ஏதும் இருப்பின் உடனடியாக அதிகாரிகளுக்கு முறையிட வேண்டும். மேலும், தமது வலயத்திற்குப் பொறுப்பான […]