இலங்கை

பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – இளைஞர் மரணம்!!

  • November 13, 2025
  • 0 Comments

திருகோணமலை -ஹொரவ்பொத்தானை பிரதான வீதி 10 கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்து இன்று (13) இடம்பெற்றுள்ளது. மஹதிவுல்வெவ பகுதியில் இருந்து தம்பலகாமம் நோக்கி ஆடை தொழிற்சாலைக்கு சென்ற பேருந்துடன்  மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த குறித்த  இளைஞர் மோதியதில்  விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் கபுகொல்லாவ-ஆனவிழுந்தான் பகுதியைச் சேர்ந்த எஹியா உல்முதீன் சஹீல் அஹமட் (19வயது) எனவும் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விபத்து தொடர்பிலான விசாரணைகளை மொரவெவ […]

பொழுதுபோக்கு

நியூயோர்க்கில் மீண்டும் ஜோடியாக சிக்கிய அனிருத் – காவ்யா மாறன்

  • November 13, 2025
  • 0 Comments

பிரபல இசையமைப்பாளரான அனிருத், சமீபத்தில் சன் பிக்சர்ஸ் வாரிசு காவ்யா மாறனுடன் நியூயோர்க்கில் நடந்து சென்றபோது எடுக்கப்பட்ட புதிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகின்றது. இருவரும் காதலிப்பதாக முன்னர் வதந்திகள் வந்தாலும், அனிருத் அதை தெளிவாக மறுத்திருந்தார். ஆனால் சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த படங்கள் மற்றும் வீடியோக்கள் அந்த வதந்திகளுக்கு மீண்டும் உயிர்கொடுத்துள்ளன. இப்போது இருவருக்கும் இடையிலான உறவு குறித்து ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் எடுக்கப்பட்ட இந்த […]

பொழுதுபோக்கு

“என் வாழ்க்கையில் விஜய் இருப்பது ஒரு ஆசீர்வாதம்” கண்ணீருடன் ராஷ்மிகா

  • November 13, 2025
  • 0 Comments

நேஷனல் கிரஷ், சென்சேஷனல் கிரஷ் என்றெல்லாம் அன்பாக அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா நடித்த ‘தி கேர்ள்ஃப்ரெண்ட்’ படத்தின் வெற்றி மகிழ்ச்சியில் உள்ளார். சமீபத்தில், படத்தின் வெற்றி விழாவை தயாரிப்பாளர்கள் ஏற்பாடு செய்தனர், இதில் விஜய் தேவரகொண்டா விருந்தினராக கலந்து கொண்டார். இதில் ராஷ்மிகா தனது உரையின் போது, தி கேர்ள்ஃப்ரெண்ட்’ தனது வாழ்க்கையில் எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதைப் பற்றி பகிர்ந்து கொண்டார். தனது  பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்து, கடைசியாக முக்கியமாக, விஜய் தேவரகொண்டா பற்றி பேசியுள்ளார். […]

உலகம்

சிங்கப்பூரில் குழந்தைக்காக பொய்யுரைத்த பெண்ணுக்கு சிறை!

  • November 13, 2025
  • 0 Comments

சிங்கப்பூரில் 42 வயதுடைய பெண் ஒருவர் தனது மகளை ஒரு பிரபலமான தொடக்கப் பள்ளியில் சேர்ப்பதற்காக பொய் உரைத்த குற்றச்சாட்டில் சிறை தண்டனையை எதிர்நோக்கியுள்ளார். தனது விலாசத்தை அவர் மாற்றி கூறியமைக்காகவே அவர் சிறை தண்டனையை எதிர்நோக்கியுள்ளார். இந்நிலையில் குறித்த பெண் நீதிபதியிடம் தனக்கு மீண்டுமொரு வாய்ப்பை வழங்குமாறு கோரியுள்ளார். தன்னாள் சிறைக்கு செல்ல முடியாது எனவும் தனது மகளுக்கு தன்னுடைய உதவி தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பெண் செப்டம்பர் மாதம் பொது ஊழியர்களுக்கு […]

அரசியல் இலங்கை

மாகாணசபைத் தேர்தல்: சஜித் அணி எடுத்துள்ள முடிவு!

  • November 13, 2025
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலை பழைய முறைமையின்கீழ் நடத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் முகாமைத்துவக்குழு கூட்டம் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்றிரவு கூடியது. இதன்போது வரவு- செலவுத் திட்டம் உட்பட சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன. அவ்வேளையிலேயே அடுத்த வருடம் ஆரம்பத்தில் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தக்கு அழுத்தம் கொடுக்கும் அரசியல் சமரை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆளுகையின்கீழ் […]

அரசியல் இலங்கை

நவம்பர் 21 ஆட்சி கவிழ்ப்பு போராட்டம்?

  • November 13, 2025
  • 0 Comments

நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ள பேரணியானது ஆட்சி கவிழ்ப்புக்குரிய போராட்டம் அல்ல என்று முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது 21 ஆம் திகதி நடைபெறவுள்ள எதிரணியின் பேரணி தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ நவம்பர் 21 ஆம் திகதி பேரணி வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும்;. இது ஆட்சி கவிழ்ப்புக்குரிய போராட்டம் அல்ல என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றோம். ஏனெனில் அடுத்த […]

பொழுதுபோக்கு

ரஜினிகாந்த்-கமல்ஹாசன் படத்திலிருந்து சுந்தர் சி வெளியேறினார்! ரசிகர்கள் அதிர்ச்சி

  • November 13, 2025
  • 0 Comments

கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 173’ படத்தை சுந்தர் சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் சுந்தர் சி ஆகியோரின் கூட்டணியை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் யார் கண் பட்டதோ… சுந்தர் சி ‘தலைவர் 173’ படத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு ரசிகர்களையும் நெட்டிசன்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சுந்தர் சி தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு கடிதம் மூலம் […]

உலகம் செய்தி

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மலிவான பொருட்களுக்கு நிலையான கட்டணம் விதிக்க முன்மொழிவு!

  • November 13, 2025
  • 0 Comments

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குறைந்த மதிப்புள்ள ஆர்டர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் கட்டணம் விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்துள்ளது. இன்று இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றிய நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நுகர்வோருக்கு நேரடியாக இறக்குமதி செய்யப்படும் 150 யூரோவிற்கு குறைந்த விலையுள்ள  பொருட்களுக்கு  வரி விதிக்கப்படாது. அதற்கு பதிலாக நிலையான கட்டணங்கள் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றிய கூட்டத்தில் ,   சிறிய பொட்டலங்களுக்கு இரண்டு […]

பொழுதுபோக்கு

லோகா படத்தில் மம்மூட்டி நடிப்பது உறுதியானது

  • November 13, 2025
  • 0 Comments

துல்கர் சல்மான் தயாரிப்பில் டாமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷினி நடிப்பில் வெளியான படம் ‘லோகா சாப்டர் 1’. சூப்பர் ஹீரோ கதையில், மலையாளத்தில் உருவான இப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன்படி ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் உலக அளவில் ரூ.300 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்தது. இதன் அடுத்தடுத்த பாகங்கள் வரும்காலத்தில் உருவாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், லோகா படத்தின் ஏதாவது […]

இலங்கை

அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நினைவூட்வே பேரணி – நாமல்!

  • November 13, 2025
  • 0 Comments

நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெற உள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணி, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசாங்கத்திற்கு நினைவூட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பிறகு ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தபோது அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், பல எதிர்க்கட்சிகள் ஏற்கனவே இந்த விவாதங்களில் இணைந்துள்ளன. கடந்த காலங்களில், பொதுஜன பெரமுனவிற்குள் மட்டுமே கலந்துரையாடல்கள் […]