இலங்கை செய்தி

33 நாடுகளில் இருந்து ஆதரவு: ‘புனரமைப்பு நிதியத்தில்’ ரூ. 697 மில்லியனுக்கும் அதிக நன்கொடை வரவு!

  • December 4, 2025
  • 0 Comments

சைக்ளோன் “தித்வா”புயலால் (Cyclone Ditwah) பாதிக்கப்பட்ட பகுதிகளைப் புனரமைப்பதற்காகத் தொடங்கப்பட்ட ‘இலங்கையைப் புனரமைக்கும் நிதியம்’ (Rebuilding Sri Lanka Fund) இதுவரை 697 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நன்கொடைகளைப் பெற்றுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷனா சூரியப்பெரும (Harshana Suriyapperuma) இன்று தெரிவித்தார். இதில் அவர் கூறிய வங்கி வாரியான வரவு: இலங்கை வங்கி (Bank of Ceylon) கணக்கு மூலம் 635 மில்லியன் ரூபாய் பெறப்பட்டுள்ளது. மத்திய வங்கி (Central Bank) கணக்குகள் மூலம் 61 […]

உலகம் செய்தி

இந்தியா வந்த ரஷ்ய ஜனாதிபதியை விமான நிலையத்தில் வரவேற்ற பிரதமர் மோடி

  • December 4, 2025
  • 0 Comments

இரண்டு நாள் பயணமாக ரஷ்ய(Russia) ஜனாதிபதி விளாடிமிர் புடின்(Vladimir Putin) இன்று தலைநகர் டெல்லி(Delhi) வந்தடைந்துள்ளார். இந்நிலையில், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில்(Indira Gandhi International Airport) ரஷ்ய ஜனாதிபதியை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கட்டியணைத்து வரவேற்றுள்ளார். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிற்கு ரஷ்யத் தலைவர் மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். டெல்லியில் நடைபெறவுள்ள 23வது இந்தியா- ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகவே புடினின் வருகை இடம்பெற்றுள்ளது. இந்த பயணத்தின் போது இந்திய […]

செய்தி

85 சதவீதம் வாடிக்கையாளர்களின் மின்சாரம் மீட்கப்பட்டன

  • December 4, 2025
  • 0 Comments

சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த காரணமாகத் துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளில், சுமார் 85 சதவீதம் தற்போது சீரமைக்கப்பட்டுள்ளன என்று இலங்கை மின்சார சபையின் (CEB) பிரதிப் பொது முகாமையாளர் நோயல் பிரியந்தா(Noel Priyantha) தெரிவித்தார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று (டிசம்பர் 04) அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இந்த அறிக்கையை வெளியிட்டார். நாட்டில் உள்ள சுமார் 7 மில்லியன் மின் வடிக்கையாளர்களில், 3.9 மில்லியன் வடிக்கையாளர்களுக்கான […]

இலங்கை செய்தி

இலங்கைக்கு 80 டன் மனிதாபிமான உதவிகளை அனுப்பிய பாகிஸ்தான்

  • December 4, 2025
  • 0 Comments

டித்வா(Ditwa) சூறாவளியால் ஏற்பட்ட சமீபத்திய இயற்கை பேரிடரைத் தொடர்ந்து, இலங்கையின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் இணைந்து பாகிஸ்தான்(Pakistan) 80 டன் மனிதாபிமான உதவிகளை இலங்கைக்கு அனுப்பியுள்ளது. இலங்கையின் தேசிய விமான நிறுவனத்தால் லாகூர்(Lahore) மற்றும் கொழும்பு(Colombo) இடையே இயக்கப்படும் நான்கு தனித்தனி விமானங்களில் நிவாரணப் பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இலங்கை நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கை குழுக்களுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில், உதவிப் பொதியை வழங்குவதற்கும், தகுதியானவர்களுக்கு சரியான நேரத்தில் வழங்குவதற்கும் உதவுகிறது என்று பாகிஸ்தான் உயர் […]

இலங்கை செய்தி

தித்வா சேதம்: முக்கிய வீதிகளை புனரமைப்புக்க ஜனாதிபதி அவசர உத்தரவு.

  • December 4, 2025
  • 0 Comments

இலங்கையில் புயல் ஏற்படுத்திய சேதங்களால் உடைந்த வீதி உள்கட்டமைப்பைச் சரிசெய்ய அதிகாரிகளுக்கு அவசர முன்னுரிமை அளிக்குமாறு ஜனாதிபதி அனந்தர குமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார். நாட்டில் இயல்பு நிலையை மீட்டெடுக்கவும், போக்குவரத்துச் சேவைகளைத் தடையின்றி உறுதிப்படுத்தவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் (04) ஜனாதிபதி செயலகத்தில், போக்குவரத்து , நெடுஞ்சாலைகள் அமைச்சர்கள் மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். நிலச்சரிவுகள், வெள்ளம் மற்றும் நீர்மட்ட அதிகரிப்பு ஆகியவற்றால் நெடுஞ்சாலைகள் மற்றும் […]

உலகம் செய்தி

உயர் சிகிச்சைக்காக லண்டனுக்கு அழைத்துச் செல்லப்படும் வங்கதேச முன்னாள் பிரதமர்

  • December 4, 2025
  • 0 Comments

முன்னாள் பிரதமரும், வங்கதேச(Bangladesh) தேசியவாதக் கட்சித்(BNP) தலைவருமான பேகம் கலீதா ஜியா(Begum Khaleda Zia) உயர் சிகிச்சைக்காக லண்டனுக்கு(London) அழைத்துச் செல்லப்படவுள்ளார். கலீதா ஜியாவை கவனிக்க வரவழைக்கப்பட்ட சிறப்பு மருத்துவர்கள் குழுவின் ஆலோசனையின் பேரில், இன்றிரவு அல்லது நாளை அதிகாலையில் லண்டனுக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து(China) நான்கு மருத்துவர்கள் கலீதா ஜியாவின் மருத்துவக் குழுவில் இணைந்துள்ளனர், மேலும் ஐக்கிய இராச்சியத்தைச்(United Kingdom) சேர்ந்த சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் பெல்லி(Richard Bailey) அவரது சிகிச்சையை […]

இலங்கை செய்தி

முல்லைத்தீவில் காணாமல் போன ஐந்து கடற்படை வீரர்களில் ஒருவரின் உடல் மீட்பு

  • December 4, 2025
  • 0 Comments

முல்லைத்தீவு(Mullaitivu) மாவட்டத்தில் உள்ள சாலைப் பகுதியில் வெள்ள நிவாரண பணியின் போது காணாமல் போன ஐந்து இலங்கை கடற்படை வீரர்களில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் மழைக்கு மத்தியில் மீட்பு நடவடிக்கையின் போது சாலையை அகலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ​​நவம்பர் 30ம் திகதி ஐந்து கடற்படை வீரர்களும் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. விரிவான தேடுதல் நடவடிக்கையைத் தொடர்ந்து, காணாமல் போன கடற்படை வீரர்களில் ஒருவரின் உடல் புதுமாத்தளன்(Puthumathalan) கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் […]

இலங்கை

இலங்கையில் 481 பேரின் உயிரை பலியெடுத்த டித்வா புயல்

  • December 4, 2025
  • 0 Comments

சீரற்ற வானிலை காரணமாக இலங்கையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 481 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று தெரிவித்துள்ளது. இதேவேளை, 345 பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் அடுத்த 36 மணித்தியாலன்களுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்து வெளியான அறிவிப்பால் மக்கள் மீண்டும் அதிர்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி விளையாட்டு

ஆஷஸ் தொடர் – முதல் நாள் முடிவில் 325 ஓட்டங்கள் குவித்த இங்கிலாந்து அணி

  • December 4, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பிரபல ஆஷஸ்(Ashes) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி பிரிஸ்பேனில்(Brisbane) உள்ள கப்பா(Gabba) மைதானத்தில் ஆரம்பமானது. அந்தவகையில், பகல் இரவு(Day&Night) போட்டியாக ஆரம்பான இன்றைய போட்டியின் நாணய சுழற்சியை இங்கிலாந்து அணி வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது. இந்நிலையில், முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் 74 ஓவர்களுக்கு 9 விக்கெட்களை இழந்து 325 ஓட்டங்களை […]

இலங்கை

அடுத்த 36 மணித்தியாலங்கள் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை

  • December 4, 2025
  • 0 Comments

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பின் படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று மாலை வெளியிடப்பட்ட அறிவிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் நாளை பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ. […]