உலகம் செய்தி

உயர் மருத்துவ சிகிச்சைக்காக கலீதா ஜியாவின் லண்டன் பயணம் ஒத்திவைப்பு

  • December 5, 2025
  • 0 Comments

வங்காளதேச தேசியவாதக் கட்சியின் (BNP) தலைவரும் முன்னாள் பிரதமருமான கலீதா ஜியாவின்(Khaleda Zia) மருத்துவ விமானம் தாமதமானதாலும் அவரது உடல்நிலை சிறிது மோசமடைந்ததாலும் மேம்பட்ட சிகிச்சைக்காக லண்டனுக்குச் அழைத்து செல்ல திட்டமிடப்பட்டிருந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் மிர்சா ஃபக்ருல்(Mirza Fakhrul) தெரிவித்துள்ளார். இந்நிலையில், வங்காளதேச ஊடக நிறுவனமான UNBயிடம் பேசிய மிர்சா ஃபக்ருல், கத்தார்(Qatar) எமிரால் வழங்கப்பட்ட சிறப்பு விமான ஆம்புலன்ஸ் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக டாக்காவிற்கு(Dhaka) வராததால் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், […]

இலங்கை செய்தி

இலங்கையை மீட்க உலக தலைவர்களை அழைக்கவும் – ஹக்கீம் யோசனை

  • December 5, 2025
  • 0 Comments

இலங்கையை மீட்பதற்காக சர்வதேச கொடையாளர் மாநாட்டை அடுத்த இரு வாரங்களுக்குள் நடத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம்(Anura Kumara Dissanayaka) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம்(Rauff Hakeem) கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். “ இலங்கையில் பேரிடர் ஏற்பட்டுள்ளதால் சர்வதேசத்தின் பார்வை திரும்பியுள்ளது. எனவே, சர்வதேச கொடையாளர் மாநாட்டை நடத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியா, சீனா, ரஷ்யா உட்பட உலக நாடுகளின் தலைவர்களை இதற்கு அழைக்கலாம். […]

உலகம் செய்தி

பாகிஸ்தானின் முதல் பாதுகாப்புப் படைத் தளபதியாக அதிகாரம் பெறும் அசிம் முனீர்

  • December 5, 2025
  • 0 Comments

நாட்டின் முதல் பாதுகாப்புப் படைத் தலைவராக(CDF) ஐந்து ஆண்டுகளுக்கு ஃபீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீரை(Field Marshal Syed Asim Munir) நியமிக்க பாகிஸ்தான் ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். “பீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீரை 5 ஆண்டுகளுக்கு பாதுகாப்புப் படைத் தலைவராகவும் அதே நேரத்தில் ராணுவத் தலைமைத் தளபதியாகவும் நியமிக்க ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி(Asif Ali Zardari) ஒப்புதல் அளித்துள்ளார்” என்று அலுவலகம் Xல் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு படைத் தலைவர் பதவி […]

இலங்கை செய்தி

மகாவலி கங்கையின் அணைக்கட்டை புனரமைக்க நடவடிக்கை

  • December 5, 2025
  • 0 Comments

திருகோணமலை(Trincomalee) மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார(W. G. M. Hemantha Kumara) கள விஜயம் மேற்கொண்டுள்ளார். சூரியபுர(Suriyapura) காவல்துறை பிரிவுக்குட்பட்ட சமகிபுர – வம்மிவுர(Samakipura – Vammivura) பகுதியில் உள்ள மகாவலி(Mahaweli) கங்கையின் அணைக்கட்டு முற்றாக சேதமடைந்துள்ளது. அதனை மீள புனரமைப்பது தொடர்பான கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். குறித்த அணைக்கட்டினை மீளக்கட்டியெழுப்ப தேவையான […]

செய்தி பொழுதுபோக்கு

வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரியை(Warner Bros. Discovery) $83 பில்லியனுக்கு வாங்கும் நெட்ஃபிக்ஸ்(Netflix)

  • December 5, 2025
  • 0 Comments

பிரபல ஒளிபரப்பு நிறுவனமான நெட்ஃபிக்ஸ்(Netflix), திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி ஸ்டுடியோவான வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி(Warner Bros. Discovery) நிறுவனத்தை கிட்டத்தட்ட $83 பில்லியனுக்கு வாங்க ஒப்புக்கொண்டுள்ளது. இதன் மூலம் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு திரைப்பட பட்டியல் மற்றும் மதிப்புமிக்க ஸ்ட்ரீமிங் சேவையான HBO Maxஐ அணுக அனுமதிக்கிறது. 2019ம் ஆண்டில் டிஸ்னி ஃபாக்ஸை(Disney Fox) $71 பில்லியனுக்கு கையகப்படுத்தியதிலிருந்து பொழுதுபோக்கு துறையில் நடந்த மிகப்பெரிய ஒப்பந்தம் இதுவாகும். “இன்றைய அறிவிப்பு உலகின் இரண்டு சிறந்த ஒளிபரப்பு நிறுவனங்களை ஒருங்கிணைக்கிறது” […]

இலங்கை செய்தி

மொட்டு கட்சி அரசுக்கு ஆதரவா? – நாடாளுமன்ற உறுப்பினர் சானக விளக்கம்

  • December 5, 2025
  • 0 Comments

2026ம் நிதி ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்புக்கு நாம் எதிராக வாக்களிக்கப்போவதில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி(Sri Lanka Podujana Peramuna) அறிவித்துள்ளது. எனினும், இதன்மூலம் தமது கட்சி அரசாங்கத்தை ஆதரிக்கின்றது என அர்த்தப்படாது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிவி. சானக(DV.Chanaka) தெரிவித்துள்ளார். இந்நிலையில், நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சானக எம்.பி, “அனர்த்தத்துக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட வரவு- செலவுத் திட்டமே இது. இதனை நிறைவேற்றி எவ்வித பயனும் இல்லை. எனவே, புதிய வரவு- […]

உலகம் செய்தி

ரஷ்ய குடிமக்களுக்கு விரைவில் இலவச 30 நாள் விசா திட்டம் – பிரதமர் மோடி

  • December 5, 2025
  • 0 Comments

இந்தியாவிற்கும்(India) ரஷ்யாவிற்கும்(Russia) இடையிலான கலாச்சார உறவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi), புது தில்லி(New Delhi) விரைவில் ரஷ்ய குடிமக்களுக்கு இலவச விசா திட்டம் அறிமுகப்படுத்தபடும் என்று தெரிவித்துள்ளார். புது தில்லியில் உள்ள ஹைதராபாத்(Hyderabad) மாளிகையில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன்(Vladimir Putin) ஒரு கூட்டு செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்நிலையில், ரஷ்ய குடிமக்களுக்கு 30 நாள் இலவச இ-சுற்றுலா விசா(e-tourist visa) மற்றும் 30 நாள் குழு சுற்றுலா […]

இலங்கை செய்தி

வதந்திகளை பரப்பாதீர்: எதிரணிகளுக்கு எச்சரிக்கை!

  • December 5, 2025
  • 0 Comments

நெருக்கடியான சூழ்நிலையில் போலி தகவல்களைப் பரப்பும் சந்தர்ப்பவாத அரசியலை எதிர்க்கட்சிகள் கைவிட வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், “போலி தகவல்களை பரப்பாமல் இருப்பதுதான் தற்போதைய சூழ்நிலையில் எதிரணிகள் செய்யும் சிறந்த சேவையாக இருக்கும். அதேபோல சந்தர்ப்பவாத அரசியலை கைவிட்டுவிட்டு நாட்டை மீட்க ஒன்றுபட வேண்டும். அத்துடன், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்குரிய அனைத்து […]

செய்தி விளையாட்டு

ஆஷஸ் தொடர் – இரண்டாம் நாள் முடிவில் 44 ஓட்டங்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா

  • December 5, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பிரபல ஆஷஸ்(Ashes) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி பிரிஸ்பேனில்(Brisbane) உள்ள கப்பா(Gabba) மைதானத்தில் ஆரம்பமானது. அந்தவகையில், பகல் இரவு(Day&Night) போட்டியாக ஆரம்பான போட்டியின் நாணய சுழற்சியை இங்கிலாந்து அணி வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது. இந்நிலையில், முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 76.2 ஓவர்களுக்கு சகல விக்கெட்களை இழந்து 334 ஓட்டங்களை பெற்றது. இங்கிலாந்து அணி சார்பில் […]

இலங்கை

மொரகஹகந்த நீர்த்தேக்கம் முழுமையாக நிரம்பும் அபாயம்

  • December 5, 2025
  • 0 Comments

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் தற்போது 97.87% ஆக உயர்ந்துள்ளதாக பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இன்னும் சில நாட்களுக்குள் மழை தொடர்ந்து பெய்தால், நீர்த்தேக்கம் முழுமையாக நிரம்பும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் விழிப்புடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவலின் படி நாட்டில் நிலவும் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி வானிலை காரணமாக டிசம்பர் மாதம் 9, 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என தெரிவித்துள்ளது. இக்காலப்பகுதியில் காற்றின் […]