டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட வடக்கு மீனவர்களுக்கு புதிய படகுகள்
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலைகள் வழங்கும் நிகழ்வு காரைநகர் சீ நோர் படகு தொழிற்சாலை வளாகத்தில் நேற்று (19) நடைபெற்றது.
இந் நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்து கொண்டு மீனவர்களுக்கான படகுகள் மற்றும் வலைகளை வழங்கி வைத்தார்.
இதன்போது முதற்கட்டமாக 1.8 மில்லியன் ரூபா Rs. 1.8 million பெறுமதியான 32 வலைகளும், 8.64 மில்லியன் Rs. 8.64 million பெறுமதியான 18 படகுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
18 படகுகளில், யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு 03 படகுகளும் , முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 13 படகுகளும், மன்னார் மாவட்டத்திற்கு 02 படகுகளுமாக வழங்கி வைக்கப்பட்டன.





