பயணிகள் படகில் தீவிபத்து – 05 பேர் பலி, 80 பேர் மாயம்
பிலிப்பைன்ஸின் பலவான் தீவுப் பகுதிக்கு அப்பால் பயணித்த படகொன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் 05 பேர் உயிரிழந்துள்ளதுடன், 80 பேர் காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல் படை இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
பலவானின் கோரான் (Coron) பகுதிக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் ‘எம்வி ஜூன் ஆஸ்டர்’ (MV June Aster) என்ற படகில் தீவிபத்து ஏற்படதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த படகில் 117 பயணிகள் மற்றும் 17 பணியாளர்கள் பயணித்ததாகவும், அவர்களில் 43 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மீட்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், 80-க்கும் மேற்பட்டோர் குறித்த தகவல் இல்லை என்றும், மீட்புப் பணிகள் தொடர்வதால் இந்த எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




