இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு புதிதாக வரி விதிக்க தீர்மானம்!
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான பொருந்தக்கூடிய சுங்க இறக்குமதி வரிகள் மீது கூடுதலாக 50 சதவீத வரி விதிக்க நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, இதுவரை இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனங்கள் மீது விதிக்கப்பட்டு வந்த 30% சுங்க இறக்குமதி வரியின் மீது கூடுதலாக 50 சதவீத வரி விதிக்கப்படும்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட ஒரு சிறப்பு வர்த்தமானி அறிவிப்பின்படி, இந்த கூடுதல் வரி இன்று (15) முதல் மூன்று மாத காலத்திற்கு விதிக்கப்பட உள்ளது.
இருப்பினும், மே 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கடன் கடிதங்கள் பெறப்பட்ட வாகனங்களுக்கு இந்த புதிய வரி பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




