இலங்கை

கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவாக வாக்களித்தவர்களுக்கு 25 இலட்சம் மக்களின் சாபம் சென்றடையும் – சாணக்கியன்!

தேசிய கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் 25 இலட்சம் மக்களின் சாபம் சென்றடையும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

தேசிய கடன்மறுசீரமைப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,  “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்த நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடிதான்  முதலாவது மோசடி எனக் கூறினார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்தில் நாடு வங்குரோத்து நிலையை அடையும் என அறிந்தும் வெளிநாட்டு கடன் டொலரில் செலுத்தப்பட்டது என சுட்டிக்காட்டிய அவர்,  தற்போது கடன் மறுசீரமைப்பு ஊடாக மற்றுமொரு மோசடி இடம்பெறவுள்ளது எனவும் கூறினார்.

தேசிய கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் 25 இலட்ச ஈ.பி.எப் மற்றும் ஈ.டி.எப். உறுப்பினர்களின் சாபம் சென்றடைய வேண்டும் என்றும் தேசிய கடன் மறுசீரமைப்பு என்பது அரசாங்கத்தின் பிறிதொரு மோசடியாகும் என்றும் அவர் மேலும் கூறினார்.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content