இங்கிலாந்தில் நெடுஞ்சாலையில் கைவிடப்பட்ட கார்கள் – தலைத்தெறிக்க ஓடிய மக்கள்
இங்கிலாந்து வரலாறு காணாத வறட்சியைச் சந்தித்து வரும் நிலையில், இரட்டை வழிச்சாலையில் வேன் ஒன்று தீப்பிடித்து எரிந்து அந்த தீ பின்னர் காட்டுத்தீயாக மாறியுள்ளது.
முதலில் வேனில் ஏற்பட்ட தீ பின்னர் புதர் நிலப்பகுதிக்கு பரவி காட்டுத்தீயாக உருவெடுத்தது. இதனால் மக்கள் பலர் நெடுஞ்சாலைகளில் தங்கள் வாகனங்களை கைவிட்டு ஓடினர்.
இவ்வாறாக சுமார் 23 கார்கள் கைவிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹாம்ப்ஷயரில் உள்ள ரிங்வுட் அருகே A31 சாலையில் இந்த அனர்த்தம் நிகழ்ந்தது.
குறித்த தீயானது தற்போதும் எரிந்துக்கொண்டிருப்பதாக டெய்லி மெயில் தெரிவித்துள்ளது. 26 தீயணைப்பு வாகனங்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவரப் போராடியதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் வரலாறு காணாத வறட்சி நிலவும் வேளையில் இது நிகழ்ந்துள்ளது. 27 மில்லியன் மக்கள் குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், இந்த ஆண்டின் ஆறாவது வெப்ப அலை இந்த வார இறுதியில் வரவிருக்கிறது.
மேலும் சில பகுதிகள் இன்று அதிகாரப்பூர்வ வறட்சிப் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




