ஐரோப்பா

உக்ரைனுக்கு 16 மில்லியன் பவுண்டுகளை வழங்கும் பிரித்தானியா!

உக்ரைனின் இணைய பாதுகாப்பை மேம்படுத்த பிரித்தானியா 16 மில்லியன் பவுண்டுகளை வழங்கும் என பிரதமர் ரிஷி சுனக் உறுதியளித்துள்ளார்.

ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் மற்றொரு எதிர்த்தாக்குதலை ஆரம்பித்துள்ளது. உக்ரைனின் முக்கியமான தேசிய உள்கட்டமைப்பை ரஷ்யா குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரித்தானியா இந்த உதவி தொகுப்பை அறிவித்துள்ளது. இது “உக்ரைன் மீதான ரஷ்யாவின் பயங்கரமான தாக்குதல்கள் அவர்களின் காட்டுமிராண்டித்தனமான நில ஆக்கிரமிப்புடன் மட்டுப்படுத்தப்படவில்லை.

ஆனால் அவர்களின் இணைய உள்கட்டமைப்பைத் தாக்கும் மோசமான முயற்சிகளையும் உள்ளடக்கியது, இது வங்கியிலிருந்து எரிசக்தி விநியோகம் வரை, அப்பாவி உக்ரேனிய மக்களுக்கு முக்கிய சேவைகளை வழங்குகிறது பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்