அமெரிக்காவின் ஹோம் கமிங் திட்டம் – நாட்டை விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்தோர்
அமெரிக்காவில் கொண்டுவரப்பட்டுள்ள புராஜெக்ட் ஹோம் கமிங்’, (Project Homecoming) திட்டத்தால் சுமார் 200,000-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் சுயமாக நாட்டை விட்டு வெளியேற முன்வந்துள்ளனர்.
அவர்களில் ஏறக்குறைய பாதி பேர் தடுப்புக்காவலில் இருந்தபோதே இந்த முடிவை எடுத்துள்ளனர்.
மே 2025-ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் ஆரம்பத்தில் பங்கேற்பு குறைவாக இருந்தது. ஆனால் ஸ்டீபன் மில்லர் உள்ளிட்ட வெள்ளை மாளிகை அதிகாரிகளின் அழுத்தத்தைத் தொடர்ந்து இது கணிசமாக விரிவுபடுத்தப்பட்டது.
அமெரிக்காவை விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்தோருக்கான பண ஊக்கத்தொகைகள் $1,000 டொலரில் இருந்து 2600 டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் புலம்பெயர்ந்தோர் தடுப்புக்காவல் மையங்களுக்குள் ‘புராஜெக்ட் ஹோம் கமிங்’ வழக்கு மேலாளர்களை அறிமுகப்படுத்தி, பங்கேற்பை அதிகரிக்க உதவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




