உலகம்

அமெரிக்காவின் ஹோம் கமிங் திட்டம் – நாட்டை விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்தோர்

அமெரிக்காவில் கொண்டுவரப்பட்டுள்ள புராஜெக்ட் ஹோம் கமிங்’, (Project Homecoming) திட்டத்தால் சுமார் 200,000-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் சுயமாக நாட்டை விட்டு வெளியேற முன்வந்துள்ளனர்.

அவர்களில் ஏறக்குறைய பாதி பேர் தடுப்புக்காவலில் இருந்தபோதே இந்த முடிவை எடுத்துள்ளனர்.

மே 2025-ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் ஆரம்பத்தில் பங்கேற்பு குறைவாக இருந்தது. ஆனால் ஸ்டீபன் மில்லர் உள்ளிட்ட வெள்ளை மாளிகை அதிகாரிகளின் அழுத்தத்தைத் தொடர்ந்து இது கணிசமாக விரிவுபடுத்தப்பட்டது.

அமெரிக்காவை விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்தோருக்கான பண ஊக்கத்தொகைகள் $1,000 டொலரில் இருந்து 2600 டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் புலம்பெயர்ந்தோர் தடுப்புக்காவல் மையங்களுக்குள் ‘புராஜெக்ட் ஹோம் கமிங்’ வழக்கு மேலாளர்களை அறிமுகப்படுத்தி, பங்கேற்பை அதிகரிக்க உதவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்