ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் இளைஞனை நாடு கடத்த நடவடிக்கை – தாய் விடுத்த கோரிக்கை

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பனீஸிடம் தமிழ்த் தாய் ஒருவர் கோரிக்கை ஒன்று விடுத்துள்ளார்.

அதில் தமது மகன் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதைத் தடுப்பதற்கு தலையீடு செய்யுமாறு, அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ரீட்டா அருள் ரூபன் எனப்படும் குறித்த பெண் இலங்கையிலிருந்து 2012 ஆம் ஆண்டு படகு மூலம் ஆஸ்திரேலியாவிற்கு சென்று தற்காலிக பாதுகாப்பு விசாவில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக வசித்துள்ளார்.

அதன் பின்னர் அவருக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்பட்டது.

இதனையடுத்து, அவர் தமது மகனை ஆஸ்திரேலியாவில் குடிமயர்த்துவதற்கான நடவடிக்கையை எடுத்திருந்த நிலையில், அவரது விண்ணப்பத்தை அந்த நாட்டு குடிவரவுத் துறை 2016ம் ஆண்டு மறுத்தது.

அவர் விமானம் மூலம் அவுஸ்திரேலியா சென்ற நிலையில், மெல்போர்ன் நகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், அவரை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதை தவிர்க்க, நடவடிக்கை எடுக்குமாறு அவுஸ்திரேலிய பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித

You cannot copy content of this page

Skip to content