ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000 பேர் நிரந்தர விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதியை பெறுவார்கள் என அவுஸ்திரேலிய அரசாங்கம் கடந்த மாதம் அறிவித்திருந்தது. முன்னைய அரசாங்கத்தின் கொள்கைகள் காரணமாக தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருப்பவர்கள் பத்து வருட துயரங்களை அனுபவித்துள்ளனர் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஏனைய 12000 குடியேற்றவாசிகளின் நிலை என்னவென இன்றைய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். நாங்கள் பல வருடங்களாக காத்திருக்கின்றோம் எதிர்காலமேயில்லை என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அலி என்ற புகலிடக்கோரிக்கையாளர் தெரிவித்துள்ளார்.

அதோடு தன்னுடன் படகில் வந்த பலருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் ஆனால் தனக்கும் இன்னும் சிலருக்கும் பிரஜாவுரிமை கிடைக்கவில்லை எனவும் கவலை வெளியிட்டார். மேலும் 133 பேரில் ஐந்துபேரை நவ்வுறுவிற்கு மாற்றினார்கள் ஐந்து வருடம் அங்கு துயரங்களை துன்பங்களை அனுபவித்தோம் ஆனால் இங்கு வந்தும் அது மாறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

(Visited 6 times, 1 visits today)

hqxd1

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content