உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை முழுமையாக திறப்பு, ஈரானுக்கு எதிரான முற்றுகை தொடரும் – ட்ரம்ப்

  • April 17, 2026
  • 0 Comments

  ஹார்முஸ் நீரிணை முழுமையாக திறக்கப்பட்டு வர்த்தகத்துக்கு தயாராக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் வெளியிட்ட பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஈரானுடன் அமெரிக்காவின் வர்த்தக விவகாரம் முழுமையாக முடிவடையும் வரை, ஈரானை இலக்குவைத்த கடற்படை முற்றுகை தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார். பெரும்பாலான விடயங்கள் ஏற்கனவே பேச்சுவார்த்தையில் தீர்க்கப்பட்டுவிட்டதாகவும், இந்த செயன்முறை விரைவாக நிறைவடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் செய்தி

வாய்ப்பை வீணடிக்கக் கூடாது – லெபனான் ஜனாதிபதி வலியுறுத்தல்

  • April 17, 2026
  • 0 Comments

இஸ்ரேலுடன் நேரடி பேச்சுவார்த்தைகள் நாட்டின் எதிர்காலத்துக்கு மிகவும் முக்கியமானவை என்று லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன்,தெரிவித்துள்ளார். போர் நிறுத்தமே பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதற்கான முக்கிய நுழைவாயில் என அவர் கூறியுள்ளார். மேலும், போர்நிறுத்தத்தை உறுதிப்படுத்துவது, தெற்கு பகுதிகளில் இருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறுவதை உறுதி செய்வது, கைதிகளை விடுவிப்பது மற்றும் எல்லைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது ஆகியவை லெபனானின் முக்கிய இலக்குகள் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். கடந்த ஆண்டுகளில் பல சிரமங்களை எதிர்கொண்ட லெபனான் மக்கள் தற்போது புதிய […]

இலங்கை செய்தி

எரிசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு நியமனம்

  • April 17, 2026
  • 0 Comments

எரிசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு (G.M.R.D. Aponsu) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்  அவரிடம் கையளிக்கப்பட்டது. நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளராகக் கடமையாற்றிய ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு, இலங்கை திட்டமிடல் சேவையின் (SLPS) சிரேஷ்ட அதிகாரியாவார். அவர் தேசிய திட்டமிடல், பொது நிதி மேலாண்மை, பருவகால பொருளாதார முன்கணிப்பு, […]

உலகம் செய்தி

அனைவருக்கும் வெற்றி தேவை: போர் நிறுத்தம் நீடிக்கும் வாய்ப்பு அதிகம் என நிபுணர் கருத்து

  • April 17, 2026
  • 0 Comments

அனைத்துத் தரப்பினரின் நலன்களுக்காக அமைதி அவசியம் என மத்திய கிழக்கு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் கவனம் செலுத்தும் ‘சதம் ஹவுஸ்’ சிந்தனைக் குழுவின் இணை ஆய்வாளரான டாக்டர் லீனா கதிப், பிபிசியிடம் பேசியபோது, இந்த 10 நாள் போர் நிறுத்தம் மேலும் நிலையான ஒரு தீர்வுக்குத் தாரகமாக அமையும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கூறினார். “அனைத்து தரப்பினருக்கும் வெற்றியை வெளிப்படுத்துவது முக்கியமானது. அதனால் அமைதி அவர்களுக்கே நன்மை தருகிறது,” என்று அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவைப் […]

பொழுதுபோக்கு

மீண்டும் இணைந்த ஜி.வி.பிரகாஷ், சைந்தவி!

  • April 17, 2026
  • 0 Comments

இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி இணைந்து ‘தமிழினி’ என்ற படத்திற்கு ஒரு மென்மையான காதல் பாடலை பாடியுள்ளனர். டி.பி. சரவணன் மற்றும் இயக்குநர் கணேஷ் மூர்த்தி ஆகியோர் தற்போது ‘தமிழினி’ என்ற புதிய படத்தை உருவாக்கி வருகின்றனர். ‘தமிழினி’ திரைப்படம் மீனவ மக்களின் வாழ்க்கையை தத்ரூபமாக படமாக்கியுள்ளது. இப்படம் தென்மாவட்ட கடலோர பகுதிகளான முட்டம், உவரி, கடியப்பட்டிணம், குளச்சல், திசையன்விளை, கூட்டப்பனை, பெரிய தாழை, மணப்பாடு போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. படத்திற்கு சந்தோஷ் பாலாஜி […]

செய்தி தமிழ்நாடு

தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தத்தை மொத்தமாக திரும்பப் பெற வேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்

  • April 17, 2026
  • 0 Comments

தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தத்தை ஒன்றிய பாஜக அரசு மொத்தமாகத் திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “தமிழ்நாட்டின் அரசியலுக்கு மிக முக்கியமான நாள் இன்று. தொகுதி மறுவரையறைக்கு எதிரான நம் போராட்டங்களின் முடிவினை அறியப் போகும் நாள். நம்முடைய கடும் எதிர்ப்பினையும் போராட்டத்தினையும் தொடர்ந்து, தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டின் தொகுதி அளவு குறையாது என பிரதமரும் உள்துறை அமைச்சரும் நேற்று நாடாளுமன்றத்தில் […]

உலகம் செய்தி

போர் நிறுத்தத்திற்கு முன் தாக்குதல் – டயர் நகரில் 13 பேர் உயிரிழப்பு

  • April 17, 2026
  • 0 Comments

லெபனானில் உள்ள டயர் நகரை இஸ்ரேலியப் படைகள் நேற்று இரவு தாக்கியதில் 13 பேர் உயிரிழந்ததுடன், 35 பேர் காயமடைந்ததாக அரசு நடத்தும் நேஷனல் நியூஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது. மேலும்,  இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள 15 பேரை மீட்க தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ரேலுடன் ஏற்பட்டிருந்த 10 நாள் போர் நிறுத்தம் நேற்று நள்ளிரவில் அமலுக்கு வருவதற்கு முன்பாகவே இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக, நகர அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ஏஎஃப்பி […]

உலகம் செய்தி

போர் நிறுத்தம் நிரந்தரமாக இருக்க வேண்டும் – பிரித்தானியா வலியுறுத்தல்

  • April 17, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பாரிஸில் உள்ள எலிசே அரண்மனை சென்றடைந்து, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனைச் சந்திக்க உள்ளார். சந்திப்புக்கு முன் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த ஸ்டார்மர், ஈரானில் நடைபெறும் போரால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகளை குறைப்பதற்கும், ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுவதற்கும் தாம் இயன்ற அனைத்தையும் செய்வேன் என்று தெரிவித்தார். “போர் நிறுத்தம் நிரந்தரமாக இருக்க வேண்டும். அதற்கான ஒப்பந்தமும் அவசியம். ஹார்முஸ் நீரிணை திறந்திருப்பதை உறுதி செய்யும் வகையில் நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவது […]

இலங்கை செய்தி

தையிட்டி காணி அளவீடு மே 15ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

  • April 17, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம்-வலிகாமம் வடக்கு, தையிட்டி திஸ்ஸ விகாரை மற்றும் அதனைச் சூழவுள்ள பொது மக்களின் காணிகளை அளவீடு செய்யும் பணிகள், விகாராதிபதியின் எதிர்ப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களால் எதிர்வரும் மே மாதம் 15 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தையிட்டி விகாரையைச் சூழவுள்ள 17 காணி உரிமையாளர்களின் காணிகளை இன்று வெள்ளிக்கிழமை அளவீடு செய்வதற்கு, கடந்த 11 ஆம் திகதி யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்காக இணங்குமாறு கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் யாழ். […]

அரசியல் இலங்கை செய்தி

திடீர் பதவி விலகலுக்கு காரணம் என்ன? வெளியானது பின்புலம்!

  • April 17, 2026
  • 0 Comments

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் தமது ராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இன்று (17) கையளித்து, பதவி விலகியுள்ளனர். நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படவுள்ள பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீனமான விசாரணைக்கு இடமளிக்கும் வகையிலேயே அவர்கள் இம்முடிவை எடுத்துள்ளனர். இவ்விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று இன்று நியமிக்கப்பட்டது. இந்நிலையிலேயே […]

error: Content is protected !!