உலகம்

தைவானில் இராணுவ விமானம் விபத்து : இருவர் பலி!

  • June 2, 2026
  • 0 Comments

இராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த தைவானிய விமானம் ஒன்று இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் விமானத்தை இயக்கிய இரண்டு விமானிகள் உயிரிழந்துள்ளதாக  பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. நாட்டின் தெற்குத் துறைமுக நகரமான காவோசியுங்கில் (Kaohsiung)உள்ள காங்ஷான் (Gangshan) விமானப்படைத் தளத்தின் ஓடுபாதையில் இந்த விபத்து நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லெப்டினன்ட்-கர்னல்கள் லூ மற்றும் குவோ என அடையாளம் காணப்பட்ட இரு விமானிகளே மேற்படி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணத்தை விசாரிக்க விமானப்படை ஒரு பணிக்குழுவை அமைத்துள்ளது.  

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

மேற்குகரை வன்முறை: இஸ்ரேலியர்களுக்கு ஆஸ்திரேலியா தடை!

  • June 2, 2026
  • 0 Comments

பாலஸ்தீனப் பகுதியில் அதிகரித்து வரும் வன்முறைக்கு எதிரொலியாக, மேற்கு கரையில் (West Bank) உள்ள இஸ்ரேலிய குடியேற்ற விவசாய புறக்காவல் நிலையங்கள் (farming outposts) மீது ஆஸ்திரேலியா முதன்முறையாக தடைகளை விதித்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் நான்கு பண்ணை புறக்காவல் நிலையங்கள் மற்றும் வன்முறையில் ஈடுபட்ட மூன்று நபர்கள் மீது ராஜதந்திர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சொத்துக்களை அழித்தல் மற்றும் உடல்ரீதியான தாக்குதல்கள் போன்ற செயல்களைச் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று […]

இலங்கை செய்தி

செம்மணியில் இதுவரை 263 எலும்புக்கூடுகள் அடையாளம்!

  • June 2, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து நேற்று அடையாளம் காணப்பட்ட என்புத்தொகுதியின் கழுத்துப் பகுதியிலிருந்து நாணயக்குற்றி வடிவிலான பொருள் ஒன்று கண்டறியப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதனுடன், செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித என்புத்தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 263ஆக அதிகரித்துள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 13ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றன. இதன்போது, புதிதாக என்புத்தொகுதியொன்று அடையாளம் காணப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டது. மேலதிகமாக மேலும் மூன்று மனித என்புத்தொகுதிகள் […]

இலங்கை செய்தி

செம்மணி புதைகுழி: மயான எரிதகன மேடையின் அத்திவாரம் இடிந்து வீழ்ந்தது!

  • June 2, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட சித்துப்பாத்தி இந்து மயான எரிதகன மேடையின் அத்திவாரத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகளின்போது எரிதகன மேடைக்கு அருகில் பல மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டன. இந்தப் புதைகுழியானது எரிதகன மேடையின் அத்திவாரம் வரை நீண்டு சென்றிருந்த நிலையிலேயே, தற்போது அத்திவாரத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது. இது தொடர்பில் செம்மணி புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் முன்னிலையாகும் […]

உலகம்

ஹிஸ்புல்லா – இஸ்ரேலிய தலைவர்களுடன் ட்ரம்ப் பேச்சுவார்த்தை!! மத்தியஸ்தத்திற்கான கதவு திறப்பு!

  • June 2, 2026
  • 0 Comments

லெபனானில் நிலவும் மோதல் நிலைமை காரணமாக அமெரிக்காவுடனான மத்தியஸ்த பேச்சுவார்த்தைகளை ஈரான் நிறுத்தி வைத்தது. இதனைத் தொடர்ந்து அதிரித்த பதற்றங்களை தணிக்கும் வகையில் பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும், லெபனானுக்கு இஸ்ரேலிய படைகள் செல்லாது என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், எந்த இஸ்ரேலியப் படைகளும் பெய்ரூட்டிற்குச் செல்லாது, மேலும் அவர்கள் செல்லும் வழியில் உள்ள படைகள் ஏற்கனவே திருப்பி அனுப்பப்பட்டுவிட்டன” என்று  தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லாவிற்கிடையே […]

இலங்கை

7 சதவீதத்தால் உயரும் பணவீக்கம் : மத்திய வங்கி கணிப்பு!

  • June 2, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் தொடரும் மோதல் மற்றும் அதிகரித்து வரும் உலகளாவிய எரிபொருள் விலைகள் காரணமாக நாட்டின் பணவீக்க விகிதம் 7 சதவீதமாக  உயரக்கூடும் என்று இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், மத்திய கிழக்கு மோதல் குறுகிய காலத்தில் தீர்க்கப்படும் என்று ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டாலும், அதன் நீடித்த தன்மை இலங்கையின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது […]

ஐரோப்பா

சுவீடனில் தஞ்சம் கோருவோருக்கு முக்கிய செய்தி!

  • June 1, 2026
  • 0 Comments

புலம்பெயர்ந்தோர் தஞ்சம் கோருவதற்கான சட்டவிதிகளில் சில தளர்வுகளை சுவீடன் அரசாங்கம் இன்று  அறிவித்துள்ளது. முன்னதாக  புலம்பெயர் குடும்பத்தினர் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டாலும் பதின்ம வயதினர் நாடு கடத்தப்பட வாய்ப்பிருந்தது. இதனை சட்டவல்லுநர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர். அதாவது   தஞ்சம் கோரியபோது தங்கள் பெற்றோருடன் ஸ்வீடனுக்கு வந்த சிறார்கள், 18 வயதை எட்டும்போது நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலமை காணப்பட்டது. இந்நிலையில் இந்த சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் நாடு கடத்தப்படும் வயது அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாடு கடத்தப்படும் […]

ஐரோப்பா

போலந்தின் சர்ச்சைக்குரிய 666 பேருந்து சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை!

  • June 1, 2026
  • 0 Comments

போலந்தின் ஹெல் கடற்கரை சுற்றுலாத் தலத்திற்குச் செல்லும் சர்ச்சைக்குரிய 666 பேருந்து சேவை இந்த கோடை காலத்தில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. முன்னதாக PKS Gdynia நிறுவனத்தால் இயக்கப்பட்டு வந்த பேருந்து சேவை சில மதக் குழுக்களின் எதிர்ப்புகளைத் தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டதுடன், 669 என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.  அத்துடன் குறித்த பேருந்து நிறுவனம் “சாத்தானியத்தைப் பரப்புவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த  சேவையை வழங்க   ஃபிளிக்ஸ்பஸ் (FlixBus) என்ற பேருந்து நிறுவனம் […]

உலகம் செய்தி

லெபனானிலும் போர் நிறுத்தத்தைக் கோருகிறது ஈரான்!

  • June 1, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான போர் நிறுத்த ஒப்பந்தமானது லெபனான் உட்பட அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தக்கூடியதாக இருக்க வேண்டும் என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதற்கமைய குறிப்பிட்ட ஒரு பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டாலும் அது ஒட்டுமொத்தப் போர்நிறுத்தத்தை மீறுவதற்குச் சமம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, லெபனான், பெய்ரூட் மீது தரைவழித் தாக்குதல் நடத்த உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ஈரான் தரப்பில் இருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பானது, ஈரான் […]

இலங்கை

பிணை முறி மோசடி விவகாரம் : பிரதிவாதிகளுக்கு சாதமாக வழங்கப்பட்ட தீர்ப்பு இரத்து!

  • June 1, 2026
  • 0 Comments

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் அனைத்து குற்றவாளிகளையும் விடுவித்திருந்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றம் இரத்த செய்து இன்று தீர்ப்பளித்துள்ளது. அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி, பெர்பச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனம், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன், முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவினருக்கு எதிராக சட்டமா அதிபரால் முன்னதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கினை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் அவர்களை விடுவித்து உத்தரவு […]