பிணை முறி மோசடி விவகாரம் : பிரதிவாதிகளுக்கு சாதமாக வழங்கப்பட்ட தீர்ப்பு இரத்து!
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் அனைத்து குற்றவாளிகளையும் விடுவித்திருந்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றம் இரத்த செய்து இன்று தீர்ப்பளித்துள்ளது.
அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி, பெர்பச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனம், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன், முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவினருக்கு எதிராக சட்டமா அதிபரால் முன்னதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கினை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் அவர்களை விடுவித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து குறித்த வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று 05 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை இரத்து செய்ததுடன், பொதுச் சொத்துக்களுக்கு எதிரான குற்றங்கள் சட்டத்தின் கீழ் ஒரு நிறுவனத்தின் மீது வழக்குத் தொடரலாம் என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.




