இலங்கை செய்தி

வரலாற்று சாதனை படைத்த மோடிக்கு ஜனாதிபதி அநுர வாழ்த்து!

  • June 10, 2026
  • 0 Comments

இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பதவி வகிக்கும் பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில், இந்த மைல்கல் சாதனை என்பது இந்திய மக்கள் அவரது தலைமையின் மீது மீண்டும் மீண்டும் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியின் பதவிக் காலத்தில் இந்தியா […]

அரசியல் இலங்கை செய்தி

‘இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள்’ – அமெரிக்க தூதுக்குழுவுடன் சஜித் ஆராய்வு!

  • June 10, 2026
  • 0 Comments

  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அமெரிக்க House Democracy Partnership (HDP) தூதுக்குழுவினருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று நடைபெற்றது. நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, இரு தரப்பினரிடையேயான நாடாளுமன்ற ஒத்துழைப்பு, ஜனநாயக ஆட்சி, சட்டவாக்க செயல்முறைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டன. அத்துடன், இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக நிலவிவரும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது. அரச கொள்கை அபிவிருத்தியாக்கம் மற்றும் இலங்கை எதிர்கொள்ளும் சமகால […]

ஐரோப்பா செய்தி

லண்டனில் வாழும் பெண் சமூக ஆர்வலரை குறிவைத்துள்ள சீன உளவாளிகள்?

  • June 10, 2026
  • 0 Comments

லண்டனில் வசிக்கும் முன்னணி சீன சமூக ஆர்வலர் ஒருவரை, பாலியல் நடத்தை கெட்டவராகவும் போதைக்கு அடிமையானவராகவும் சித்தரிக்கும் போலி பதிவுகள் எக்ஸ் தளத்தில் பரப்பட்டன. எனினும், இந்த அவதூறுகள் எலோன் மஸ்க்கின் ‘X’ தளத்தின் விதிகளை மீறவில்லை என்று கூறி அந்த நிறுவனம் நடவடிக்கை எடுக்க மறுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனைத் தளமாகக் கொண்ட China Dissent Network என்ற அமைப்பின் 27 வயது நிறுவனரான Apple Peiqing Ni என்பவர் , சீன அரசு […]

உலகம்

தென்னாப்பிரிக்காவில் 12 பேர் படுகொலை – சந்தேகநபர்கள் தலைமறைவு!

  • June 10, 2026
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் பாரிய துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. இதில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 09 பேர் காயமடைந்துள்ளனர். உள்ளூர் நேரப்படி நேற்று இரவு துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக தெரியவருகிறது. வெள்ளை நிற டொயோட்டா குவாண்டம் வாகனத்தில் சம்பவ இடத்திற்கு வந்த  10இற்கும் மேற்பட்ட நபர்கள் தாக்குதலை நிகழ்த்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத சுரங்கத் தொழிலுடன் தொடர்புடைய பிரச்சினைகளே மேற்படி தாக்குதலுக்கு […]

ஐரோப்பா

“அமைதியாக இருக்க வேண்டிய நேரம் இது” – டவுனிங் தெரு வலியுறுத்தல்!

  • June 10, 2026
  • 0 Comments

பெல்ஃபாஸ்ட் (Belfast) நகரில் நடந்த கத்திக்குத்துத் தாக்குதலைத் தொடர்ந்து அங்கு கலவரம் வெடித்த நிலையில், “அமைதியாக இருக்க வேண்டிய நேரம் இது” என டவுனிங் தெரு தெரிவித்துள்ளது. மேற்படி வன்முறை சம்பவத்தினால் பேருந்து ஒன்று எரிக்கப்பட்டுள்ளதுடன், பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. அத்துடன் குடியிருப்புவாசிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் இந்த சம்பவத்தை  அரசியல் தலைவர்கள் பலர் கண்டித்துள்ளனர். இதற்கமைய வட அயர்லாந்தின் முதல் அமைச்சர் மிஷேல் ஓ’நீல் மற்றும் செயலாளர் ஹிலாரி பென் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இந்த […]

ஐரோப்பா

நோவாக்கின் கொலை வழக்கு – புகலிடக்கோரிக்கையாளர் நீதிமன்றத்தில் முன்னிலை!

  • June 10, 2026
  • 0 Comments

லண்டனில் கத்திகுத்து தாக்குதல் சம்பத்துடன் தொடர்புடைய 30 வயதுடைய சூடான் பிரஜை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இதற்கிடையே ஹென்றி நோவாக்கின் கொலையை தொடர்ந்து நேற்று  லண்டன் முழுவதும்   போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பெல்ஃபாஸ்ட் முழுவதும் பல வீடுகளும், கார்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து குடியிருப்பாளர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். சுமார் 100 பேரைக் கொண்ட கும்பல் வீடுகளுக்கு தீவைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. முகமூடி அணிந்த இளைஞர்கள் நகரம் முழுவதும் பல இடங்களில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும் […]

ஐரோப்பா செய்தி

வன்முறை வேண்டாம்: பிஷப் David McClay அழைப்பு

  • June 10, 2026
  • 0 Comments

  கிழக்கு Belfast நகரில் சமீபத்தில் அரங்கேறிய வன்முறைச் சம்பவங்களை அயர்லாந்து திருச்சபையின் பிஷப் David McClay வன்மையாகக் கண்டித்துள்ளார். சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் இத்தகைய செயல்கள் பொதுமக்களின் கருத்தை பிரதிபலிக்காது என்றும், இவை மக்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, இளைஞர் மீது நடத்தப்பட்ட கொரூரமான தாக்குதலுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்ததோடு, அவர் விரைவில் குணமடையவும் பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளார். வன்முறையற்ற மற்றும் அமைதியான சூழல் மீண்டும் வீதிகளில் திரும்ப வேண்டும் […]

ஐரோப்பா செய்தி

Belfast நகரில் வன்முறை வெடிப்பு: பல வீடுகள் தீக்கிரை: பின்னணி என்ன?

  • June 10, 2026
  • 0 Comments

வட அயர்லாந்தின் Belfast நகரில் திங்கள்கிழமை இரவு நடந்த கொடூரமான கத்திக்குத்துத் தாக்குதலைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை இரவு வெடித்த தீவிர வன்முறையில் பல வீடுகள் மற்றும் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு அலறியடித்துக்கொண்டு வெளியேற வேண்டிய பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்தத் தாக்குதலை நடத்தியவர் புலம்பெயர்ந்தவர் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவியதால், தீவிரமான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்கள் உருவெடுத்தன. சமூக ஊடகங்களில் பரவிய குடியேற்றவாசிகளுக்கு எதிரான Anti-immigration போராட்ட அழைப்புகளைத் தொடர்ந்து, […]

அரசியல் இலங்கை செய்தி

கோட்டாபயவுக்கு பயணத்தடை விதிக்கப்பட்ட பின்பே சுரேஷ் சலே அணி குழப்பம்!

  • June 10, 2026
  • 0 Comments

“சுரேஷ் சலே சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படவில்லை. விசாரணைகளை திசைதிருப்பவே சில அரசியல்வாதிகள் முற்படுகின்றனர். கோட்டாபய ராஜபக்ச உட்பட இருவருக்கு பயணம் தடை விதிக்கப்பட்ட பின்னரே குழப்பம் அடைந்துள்ளனர்.” இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது சுரேஷ் சலே விவகாரம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு , “ […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

அமெரிக்கா – ஈரான் மோதல்: பொருளாதார பாதிப்பு குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் கவலை!

  • June 10, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் அதிகரித்து வரும் இராணுவ மோதல்கள் குறித்து ஆஸ்திரேலியப் பிரதமர் Anthony Albanese தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார். ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில், இந்த போர்ச் சூழல் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று Anthony Albanese எச்சரித்துள்ளார். டொனால்ட் ட்ரம்ப் அறிவிக்கும் அமைதி ஒப்பந்தங்கள் ஒருவித நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதாகவும், இதனால் எரிபொருள் விலை உயர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். […]