ஐரோப்பா செய்தி

எபோலா தொற்றுதிப்பு எண்ணிக்கை 1,000 ஐ கடந்திருக்கலாம் – லண்டன் தொற்று நோய் பகுப்பாய்வு மையம்

  • May 19, 2026
  • 0 Comments

காங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவி வரும் எபோலா நோய், எதிர்பார்க்கப்பட்டதை விடவும் வேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதுவரை சுமார்131 பேர் உயிரிழந்துள்ளதுடன், 513 க்கும் மேற்பட்ட தொற்றுகள் சந்தேகிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்டை நாடான உகாண்டாவிலும் இந்த நோய் தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளார். லண்டனில் உள்ள எம்ஆர்சி தொற்று நோய் பகுப்பாய்வு மையம் வெளியிட்ட ஆய்வில், உண்மையான பாதிப்பு எண்ணிக்கை 1,000 ஐ கடந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளை ஆரம்பத்திலேயே கண்டறியாதது, […]

ஐரோப்பா

உக்ரைனில் ஏவுகணைத் தாக்குதல் – பலர் பலி!

  • May 19, 2026
  • 0 Comments

உக்ரைனின் வடக்குப் பகுதியான செர்னிஹிவ் மற்றும் சுமி பிராந்தியங்களில் ரஷ்யா ஏவுகணை மற்றும் ஆளில்லா ட்ரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நால்வர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்ததாக உக்ரைனிய அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். அதேநேரம் செர்னிஹிவ் (Chernihiv) பிராந்தியத்தில் உள்ள ப்ரைலுகி (Pryluky) நகரின் மையத்தில் நடத்தப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், 14 வயது சிறுவன் உட்பட குறைந்தது 17 பேர் காயமடைந்ததாகவும் பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இலங்கை செய்தி

யாழில் பொலிஸ் விசாரணைக்கு சென்ற நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

  • May 19, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காகச் சென்ற நபர் ஒருவர், பொலிஸ் நிலையத்துக்குள்ளேயே திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த ப. சுரேஷ்குமார் (வயது 41) என்பவரே இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். இவருக்கும் இவரது பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே நீண்டகாலமாக வீதி ஒழுங்கை (பாதை) தொடர்பான தகராறு நிலவி வந்துள்ளது. இது தொடர்பாக சுரேஷ்குமார் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். குறித்த முறைப்பாடு தொடர்பான விசாரணைக்காக இரு தரப்பினரும் […]

அரசியல் இலங்கை செய்தி

“ யாழ்ப்பாணம் வந்தால் சீமானை சுடுவேன்” – நாடாளுமன்றில் அர்ச்சுனா மிரட்டல்!

  • May 19, 2026
  • 0 Comments

” யாழ்ப்பாணம் வந்திருந்தால் சீமானை சுட்டு வீழ்த்தி இருப்பேன்.” என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார் . நாம் தமிழர் கட்சியையும், அதன் ஒருங்கிணைப்பாளர் சீமானையும் அர்ச்சுனா எம்.பி. அண்மைக்காலமாக கடுமையாக விமர்சித்து வருகின்றார். தமிழகம் சென்றிருந்தவேளைகூட சீமான்மீது சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்திருந்தார். இந்நிலையில் இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதும் அவர் சீமான்மீது விமர்சனக் கணைகளைத் தொடுத்தார். “அண்ணன் சீமான், கேவலமான வார்த்தைகளைப் பயன்படுத்தி என்னை விமர்சித்திருந்தார். நான் […]

அரசியல் இலங்கை செய்தி

உள்நாட்டுக்குள்ளேயே பிரச்சினையை தீர்க்க சஜித் அழைப்பு!

  • May 19, 2026
  • 0 Comments

“மூன்று தசாப்த கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜெனிவா ஊடாகத் தீர்வுகளை வழங்குவதில் எந்தப் பயனும் இல்லை. எமது நாட்டின் பிரச்சினைகளை எமது நாட்டுக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள வேண்டும்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். தமதுரையில் சஜித் பிரேமதாச கூறியவை வருமாறு , “யுத்த வெற்றிக்கு அரசியல் ரீதியாகத் தலைமை தாங்கிய மஹிந்த ராஜபக்சவுக்கும், இராணுவத் தளபதியாகத் தலைமை தாங்கிய ஜெனரல் சரத் பொன்சேகா உட்பட […]

செய்தி தமிழ்நாடு

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 பேரை நீதிபதிகளாக நியமிக்க அனுமதி

  • May 19, 2026
  • 0 Comments

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 பேரை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் அனுமதியளித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடங்களில் 23 நீதிபதி பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளன. இந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில், கடந்த 2025 ஆம் ஆண்டு மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் அந்தஸ்தில் உள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் எஸ்.அல்லி மற்றும் மாவட்ட நீதிபதிகள் முருகன், சுமதி, திருமகள் சந்திரசேகர், தர்மலிங்கம் லிங்கேஸ்வரன், கார்த்திகேயன் பாலதாண்டாயுதம், சண்முகம் கார்த்திகேயன், […]

உலகம் செய்தி

எபோலா வைரஸின் புதிய திரிபால் 120 பேர் உயிரிழப்பு!! தடுப்பு மருந்தும் இல்லை!!

  • May 19, 2026
  • 0 Comments

எபோலா வைரஸின் ஒருவகையான புதிய திரிபான புண்டிபுக்யோ (Bundibugyo) வைரஸால் காங்கோவில் 120 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் பொதுவான எபோலா வகைகளைப் போலல்லாமல், இந்த புதிய  வைரஸுக்கு  குறிப்பிட்ட சிகிச்சைகளோ தடுப்பூசிகளோ இல்லை, இது தடுப்பு நடவடிக்கைகளைச் சிக்கலாக்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நோயுற்ற அல்லது இறந்த நோயாளிகளின் உடல் திரவங்களுடன் ஏற்படும் நெருங்கிய தொடர்பு மூலம் இந்த வைரஸ் மற்றவர்களுக்கு பரவுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இது சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு அதிகபட்ச ஆபத்தை ஏற்படுத்துகிறது. ஜைர் […]

ஐரோப்பா செய்தி

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு லண்டனில் பேரணி

  • May 19, 2026
  • 0 Comments

முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு லண்டன் நகரில் பேரணியும் கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. இந்த பேரணி நேற்று பிற்பகல் பாராளுமன்ற சதுக்கம் பகுதியில் ஆரம்பமாகியதுடன் Downing Street இல் நிறைவடைந்தது. தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற கொலை சம்பவத்தை உலக நாடுகளுக்கு மீண்டும் நினைவூட்டும் நோக்கில் இந்த பேரணி ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. 2009 ஆம் ஆண்டில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூரும் வகையில் இடம்பெற்ற இந்த பேரணியில் உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து நீதிக்கான கோரிக்கைகளை முன்வைத்து […]

ஐரோப்பா

எஸ்டோனியாவின் வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த ட்ரோனால் பரபரப்பு!

  • May 19, 2026
  • 0 Comments

உக்ரைனில் தயாரிக்கப்பட்டதாக நம்பப்படும் ட்ரோன் ஒன்று எஸ்டோனியாவின் வான்பரப்பிற்குள் நுழைந்த நிலையில், நேட்டோ படையினர் சுட்டு வீழ்த்தியதாக செய்தி வெளியாகியுள்ளது. பால்டிக் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஹன்னோ பெவ்கூர்  ( Hanno Pevkur) இன்று இந்த தகவலை வெளியிட்டார். மார்ச் மாதம் முதல் ரஷ்யாவை ஒட்டியுள்ள நேட்டோ உறுப்பு நாடுகளான பின்லாந்து, லாட்வியா, லிதுவேனியா மற்றும் எஸ்டோனியாவின் வான்வெளிக்குள் பல உக்ரேனிய இராணுவ ட்ரோன்கள் அத்துமீறி நுழைந்துள்ளன. மேலும், இந்த ஊடுருவல்களைக் கையாண்ட விதம் குறித்து லாட்விய […]

இந்தியா இலங்கை செய்தி

SriLankan ஏர்லைன்ஸ் சென்னை அலுவலகத்தில் நிதி மோசடி!

  • May 19, 2026
  • 0 Comments

SriLankan Airlines நிறுவனத்தின் சென்னை கிளையில் பணியாற்றிய சில இந்திய ஊழியர்கள் சுமார் 2.2 கோடி ரூபா நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வர்த்தகப் பிரிவைச் சேர்ந்த இந்த பணியாளர்கள், விலைப்பட்டியல்கள் மற்றும் கையொப்பங்களை போலியாக மாற்றி நீண்ட காலமாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக SriLankan Airlines நிறுவனம் இந்திய காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளதுடன், இழந்த பணத்தை மீட்பதற்கான விசாரணைகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.