முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு லண்டனில் பேரணி
முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு லண்டன் நகரில் பேரணியும் கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
இந்த பேரணி நேற்று பிற்பகல் பாராளுமன்ற சதுக்கம் பகுதியில் ஆரம்பமாகியதுடன் Downing Street இல் நிறைவடைந்தது.
தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற கொலை சம்பவத்தை உலக நாடுகளுக்கு மீண்டும் நினைவூட்டும் நோக்கில் இந்த பேரணி ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.
2009 ஆம் ஆண்டில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூரும் வகையில் இடம்பெற்ற இந்த பேரணியில் உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து நீதிக்கான கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
இந்த பேரணியை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியா மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு ஐக்கிய இராச்சியம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.





