பிரித்தானியாவில் மூடப்படும் ரயில் பாதை – பயணிகளின் கவனத்திற்கு
பிரித்தானியாவின் பெட்ஃபோர்ட் (Bedford ) பகுதியில் இடம்பெற்ற விபத்தை தொடர்ந்து அப்பகுதியூடான இரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் அந்த பாதை புனரமைப்பு பணிகளுக்காக வரும் 28 ஆம் திகதிவரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பெட்ஃபோர்டுக்கும் (Bedford ) லண்டன் செயின்ட் பான்கிராஸுக்கும் (London St Pancras) இடையிலான ரயில் பாதை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூடல் குறிப்பிடத்தக்க இடையூறுகளை ஏற்படுத்தும் எனவும் ரயில்வே நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் குறித்த ரயில் விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்ததுடன், மேலும் 09 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.




