அரசியல் இலங்கை செய்தி

“ யாழ்ப்பாணம் வந்தால் சீமானை சுடுவேன்” – நாடாளுமன்றில் அர்ச்சுனா மிரட்டல்!

” யாழ்ப்பாணம் வந்திருந்தால் சீமானை சுட்டு வீழ்த்தி இருப்பேன்.” என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்
.
நாம் தமிழர் கட்சியையும், அதன் ஒருங்கிணைப்பாளர் சீமானையும் அர்ச்சுனா எம்.பி. அண்மைக்காலமாக கடுமையாக விமர்சித்து வருகின்றார்.

தமிழகம் சென்றிருந்தவேளைகூட சீமான்மீது சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்திருந்தார்.

இந்நிலையில் இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதும் அவர் சீமான்மீது விமர்சனக் கணைகளைத் தொடுத்தார்.

“அண்ணன் சீமான், கேவலமான வார்த்தைகளைப் பயன்படுத்தி என்னை விமர்சித்திருந்தார்.

நான் இந்தியா வரும்போது ஆயுதம் கொண்டுவர முடியாது. அவ்வாறு கொண்டுவந்திருந்தால் உன்னை (சீமானை) சுட்டிருப்பேன்.

நீ யாழ்ப்பாணம் வந்திருந்தால் சுட்டிருப்பேன்.
நீ இந்தியாவிலேயே இரு, திரள் நிதி வரும். நன்றாக சாப்பிடு, ஆனால் இனத்தை விற்காதே, எங்களின் வலியை விற்காதே.” எனவும் படு மோசமாக அர்ச்சுனா விமர்சித்தார்.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை