இலங்கை செய்தி

வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆசைகாட்டி கோடிகளை சுருட்டிய ஆசாமி கைது!

  • May 19, 2026
  • 0 Comments

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாகச் சமூக ஊடகங்கள் ஊடாக விளம்பரப்படுத்தி, பல கோடி ரூபா பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபரை குச்சவெளி பொலிஸார் கைது செய்துள்ளனர். பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களால் அளிக்கப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர், கிண்ணியா பகுதியை பிறப்பிடமாகக் கொண்டவர் என்றும், தற்போது குச்சவெளி பிரதேசத்தில் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருபவர் என்றும், நீண்ட காலமாக கொழும்பில் தங்கியிருந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. வெளிநாடுகளில் […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு நிந்தவூரில் துப்புரவுப் பணிகள் தீவிரம்

  • May 19, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் நிந்தவூர் விஜயத்தை முன்னிட்டு, நிந்தவூர் பிரதேச சபையின் ஏற்பாட்டில் அஷ்ரப் ஞாபகார்த்த கலாச்சார மண்டபத்தை அண்மித்த பகுதிகளில் துப்புரவு மற்றும் சுற்றுச்சூழல் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்று (19) நடைபெற்ற இந்த நடவடிக்கையில், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா, பிரதேச சபை உறுப்பினர்கள், சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பிரஜா சக்தி தவிசாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் தன்னார்வ அடிப்படையில் […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை மீள திறக்கப்பட வேண்டும்: G-7 மாநாட்டில் வலியுறுத்து

  • May 19, 2026
  • 0 Comments

உலகப் பொருளாதாரத்தில் நிலவும் அபாயங்களைக் களைவதற்கு ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு G– 7 நாடுகளின் நிதி அமைச்சர்கள் உறுதிபூண்டுள்ளனர். அதேபோல சர்வதேச வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணைப் பகுதியை மீண்டும் திறக்க வேண்டியது அவசியம் எனவும் அவர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். உலகப் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் சவால்களை எதிர்கொள்ள நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்பதையும் G- 7 நிதி அமைச்சர்கள் எடுத்துரைத்துள்ளனர். பாரிஸில் நடைபெற்ற இம்மாநாட்டில் கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் […]

உலகம் செய்தி

உலகளவில் உச்சம் தொட்ட மரண தண்டனை: ஈரானில் நிலைமை மோசம்!

  • May 19, 2026
  • 0 Comments

உலகளவில் மரண தண்டனைகள் கடந்த வருடம் பெருமளவில் அதிகரித்துள்ளன என்று சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த வருடம் மாத்திரம் உலகளவில் 2,700-க்கும் அதிகமானோருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி மரணதண்டனைகளில் சுமார் 2,100 தண்டனைகள் ஈரானில் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மரண தண்டனை நிறைவேற்றம் 70 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஈரான் […]

உலகம் செய்தி

போர் விவகாரத்தில் நிலைப்பாடு மாறாது – ஈரானின் மூத்த ஆய்வாளர் கருத்து

  • May 19, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் தடைகள் மற்றும் கடற்படை முற்றுகையால் ஈரானின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும்,  அது தெஹ்ரானின் நிலைப்பாட்டை மாற்றவில்லை என மத்திய கிழக்கு மூலோபாய ஆய்வுகளுக்கான மையத்தின் மூத்த ஆய்வாளர் அபாஸ் அஸ்லானி  (Abas Aslani)தெரிவித்துள்ளார். அல் ஜசீராவுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார் பொருளாதார சிரமங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதித்தாலும், பாதுகாப்பு நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா பொருளாதார அழுத்தத்தின் மூலம் ஈரானை பேச்சுவார்த்தை மேசையில் தனது நிலைப்பாட்டை மாற்ற வைக்க […]

இலங்கை செய்தி

மீனவ பிரச்சினைக்கு விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் – யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கம் கோரிக்கை

  • May 19, 2026
  • 0 Comments

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், தமிழக கடற்றொழிலாளர்கள் தமது கடல் வளங்களைச் சுரண்டாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோணிப்பிள்ளை மரியதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ் கடற்றொழில் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்திய கடற்றொழிலாளர்களால் இலங்கையின் வடபகுதி கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அவர்கள் தமது கடல் வளங்களை அழிப்பதுடன், […]

இலங்கை செய்தி

யாழ்.மாநகரசபைக்கு புதிய ஆணையாளர் நியமனம்!

  • May 19, 2026
  • 0 Comments

யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய ஆணையாளராக டி.சி. அரவிந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக எஸ்.கிருஸ்ணேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட இந்த இரு அதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு, ஆளுநர் செயலகத்தில் இன்று (19.05.2026) ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. இந்த நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை செய்தி

கிரேக்க பிணைமுறி வழக்கு –  அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

  • May 19, 2026
  • 0 Comments

கிரேக்க பிணைமுறி வழக்கில் நிபந்தனைகளை மீறியதாகத் தெரிவித்து, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக பிரதம நீதியரசரினால் நியமிக்கப்பட்ட நிரந்தர விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில்  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிபதிகள் குழாத்தில் மனோஜ் தல்கொடபிட்டிய, உதேஷ் ரணதுங்க மற்றும் புத்திக ஸ்ரீ ராகல ஆகிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளடங்குகின்றனர். கிரேக்க பிணைமுறி வழக்கின் நிபந்தனைகளின் அடிப்படையில், அஜித் நிவாட் […]

ஐரோப்பா செய்தி

சேனல் 4 நிகழ்ச்சியில் கற்பழிப்பு குற்றச்சாட்டுகள் – விசாரணை தீவிரம்

  • May 19, 2026
  • 0 Comments

சேனல் 4-இன் ‘மேரிட் அட் ஃபர்ஸ்ட் சைட்’ (Married at First Sight ) UK நிகழ்ச்சியுடன் தொடர்புடைய பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து பிரித்தானியாவின் கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுத் துறைகவலை வெளியிட்டுள்ளது. பிபிசி பனோரமா விசாரணையில், நிகழ்ச்சியின் படப்பிடிப்பின்போது இரண்டு பெண்கள் கற்பழிக்கப்பட்டதாகவும், மற்றொரு பெண் தனது சம்மதம் இல்லாத பாலியல் செயலுக்கு ஆளானதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் நலனில் ஒளிபரப்பாளர்கள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று ஆஃப்காம் தெரிவித்துள்ளது. இந்த […]

இலங்கை செய்தி

ஒட்டுமொத்த இலங்கையையும் தமிழகத்திற்கு வழங்குங்கள் – அர்ச்சுனா

  • May 19, 2026
  • 0 Comments

தற்போதைய தமிழ் அரசியல்வாதிகள் சிலர் தங்களின் சுயலாபத்திற்காகத் தமிழினத்தின் வலிகளைப் பயன்படுத்துவதாக குற்றம் சுமத்திய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ஒட்டுமொத்த இலங்கையையும் தமிழகத்திற்கு வழங்குமாறு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அண்மையில் தான் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் மிகப்பெரிய வெற்றியைத் தந்துள்ளதாகக் கூறிய அர்ச்சுனா எம்.பி, தமிழ்நாட்டு மக்களுக்கும், தங்களுக்கு ஆதரவு தெரிவித்த தமிழக அரசியல் தலைவர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் “தமிழ்நாடு […]