இலங்கை செய்தி

08 மாவட்டங்களில் சீரற்ற காலநிலை: 31,078 பேர் பாதிப்பு!

  • May 25, 2026
  • 0 Comments

இலங்கையில் வவுனியா உட்பட 08 மாவட்டங்களில் நிலவும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் 31 ஆயிரத்து இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 ஆயிரத்து 984 குடும்பங்களை சேர்ந்த 31 ஆயிரத்து 78 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாகவே பெருமளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 860 வீடுகள் பகுதியளவும், 2வீடுகள்முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. 446 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 724 பேர் 18 இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தில் ஆயிரத்து 204 […]

ஐரோப்பா செய்தி

போர் தயார்நிலை குறித்து வழிகாட்டல் வெளியிடவில்லையென பிரித்தானிய அரசு மீது குற்றச்சாட்டு

  • May 25, 2026
  • 0 Comments

போருக்கு நாடு தயாராக இருக்க வேண்டும் என கடந்த ஆண்டு எச்சரித்திருந்தாலும், அவசரநிலை அல்லது ஆயுதத் தாக்குதல் ஏற்பட்டால் மக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த தெளிவான பொது வழிகாட்டுதலை அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் தேசிய தயார்நிலை தொடர்பான விவாதங்கள் தற்போது அரசாங்க மட்டத்தில் மறைமுகமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், நாடு தாக்குதலுக்கு உள்ளானால் முக்கிய பங்கு வகிக்க வேண்டிய உள்ளுராட்சி அமைப்புகள் மற்றும் தன்னார்வ […]

உலகம்

காங்கோ, உகாண்டாவில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்கும் தாய்லாந்து!

  • May 25, 2026
  • 0 Comments

தாய்லாந்து அரசாங்கம் காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவிலிருந்து வரும் பயணிகளுக்கான பரிசோதனை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக அறிகுறியற்ற பயணிகளுக்கு 21 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலையும் அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ அல்லது சிகிச்சையோ இல்லாத எபோலாவின் புண்டிபுக்யோ வகையை,    உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக WHO  அறிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. WHOவின் அறிப்பை தொடர்ந்து தாய்லாந்தின் நோய்க் கட்டுப்பாட்டுத் துறை, காங்கோ மற்றும் உகாண்டாவை எபோலா பாதிப்பு மண்டலங்களாக வகைப்படுத்தியுள்ளது. மேலும், ஒரு […]

இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்க வேண்டியது அரசின் பொறுப்பு!

  • May 25, 2026
  • 0 Comments

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியை கண்டறிய வேண்டியது அரசின் பொறுப்பாகும். இது விடயம் தொடர்பில் பொறுப்புகூறல் முறையாக நிறைவேற்றப்பட வேண்டும்.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அஜித் பி பெரேரா எம்.பி. வலியுறுத்தினார். இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் கூறியவை வருமாறு , “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு பொறுப்பு கூறவேண்டியவர்கள், பிரதான சூத்திரதாரிகள் மற்றும் தொடர்புடையோர் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என நாம் எமது […]

உலகம்

பங்களாதேஷில் கோர விபத்து – 15 பேர் ஸ்தலத்தில் பலி!

  • May 25, 2026
  • 0 Comments

பங்களாதேஷில் இன்று அதிகாலை லொறியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். தலைநகர் டாக்காவிலிருந்து 83 கி.மீ தொலைவில் உள்ள டாங்கைல் மாவட்டத்தின் சோரடோயில் (Soratoil) பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

உலகம்

பிலிப்பைன்ஸில் கட்டுமானத்தளம் இடிந்து விழுந்து விபத்து – 03 பேர் பலி, பலர் மாயம்!

  • May 25, 2026
  • 0 Comments

பிலிப்பைன்ஸில் வார இறுதியில் கட்டுமானத் தளம் ஒன்று இடிந்து விழுந்ததில் 03 பேர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் மாயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பம்பாங்காவின் (Pampanga) ஏஞ்சல்ஸ் நகரில் (Angeles City), இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது. மீட்பு பணியாளர்கள் இன்றைய தினம் இரண்டு பேரை   மீட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாகவும்,  மற்றொருவர் மீட்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் தலைமையிலான நூற்றுக்கணக்கான மீட்புப் படையினர், மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]

உலகம் செய்தி

முடிவுக்கு வருகிறது ஈரான், அமெரிக்கா போர்? இன்று முக்கிய தீர்மானம்!

  • May 25, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வலுவான திட்ட வரைவு தற்போது தயாராக இருப்பதாகவும், இரு நாடுகளுக்கும் இடையேயான உடன்படிக்கை இன்று திங்கட்கிழமை எட்டப்படலாம் என்றும் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள மார்கோ ரூபியோ, புதுடெல்லியில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். “பேச்சுவார்த்தைகள் இன்னும் முன்னேற்றக் கட்டத்திலேயே உள்ளன. நேற்று இரவே சில நல்ல செய்திகள் வெளியாகும் என […]

இலங்கை செய்தி

இலங்கை பொலிஸாருக்கு 134 வாகனங்களை வழங்கியது இந்தியா!

  • May 25, 2026
  • 0 Comments

இலங்கை பொலிஸின் பயன்பாட்டிற்காக, இந்திய – இலங்கை நட்புறவுத் திட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 134 கெப் (Single Cabs) ரக வாகனங்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இன்று (25) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. இதற்காக இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளதுடன், இந்த கெப் ரக வாகனங்கள் வட மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளன. எதிர்காலத்திலும் இலங்கைக்கு இவ்வாறான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் […]

உலகம் செய்தி

ஈரான் பயணத்தை முடித்துக்கொண்டு பாகிஸ்தான் ராணுவ தளபதி சீனா பயணம்!

  • May 25, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் பிரதமருடன் அந்நாட்டு ராணுவத் தளபதியான ஆசிம் முனிரும் சீனாவிற்கு சென்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான பதற்றமான சூழலைத் தணிக்கும் சமாதான முயற்சிகளில் பாகிஸ்தான் ஒரு முக்கிய மத்தியஸ்தராகச் செயல்படுகிறது. இதில் குறிப்பாக பாகிஸ்தான் ராணுவ தளபதியும் முக்கிய பங்கை வகிக்கின்றார். கடந்த வாரம் ஈரானுக்குச் சென்ற பாகிஸ்தான் ராணுவத் தளபதி, அமைதி முயற்சி குறித்து விரிவான பேச்சுகளில் ஈடுபட்டார். இந்நிலையிலேயே அவர் தற்போது சீனா சென்றுள்ளார். போர் நிறுத்த […]

செய்தி விளையாட்டு

IPL 2026: play-off சுற்று நாளை ஆரம்பம்!

  • May 25, 2026
  • 0 Comments

IPL 2026 கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. play-off சுற்று நாளை (26) ஆரம்பமாகின்றது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய அணிகள் play-off சுற்றுக்கு முதன் மூன்று அணிகளாக முன்னேறின. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 69-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை அணியுடன், ராஜஸ்தான் அணி மோதியது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 30 ஓட்டங்கள்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் […]