இலங்கை செய்தி

08 மாவட்டங்களில் சீரற்ற காலநிலை: 31,078 பேர் பாதிப்பு!

இலங்கையில் வவுனியா உட்பட 08 மாவட்டங்களில் நிலவும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் 31 ஆயிரத்து இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

7 ஆயிரத்து 984 குடும்பங்களை சேர்ந்த 31 ஆயிரத்து 78 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் காரணமாகவே பெருமளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

860 வீடுகள் பகுதியளவும், 2வீடுகள்முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.

446 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 724 பேர் 18 இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் ஆயிரத்து 204 குடும்பங்களைச் சேர்ந்த4 ஆயிரத்து 558 பேரும், கொழும்பு மாவட்டத்தில் ஆயிரத்து571 குடும்பங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 773 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கம்ஹா மாவட்டத்தில் 3 ஆயிரத்து 950 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 313 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை