அரசியல் இந்தியா செய்தி

தமிழகத்தை ஆளப்போவது யார்? இன்று கிடைக்கும் விடை!

  • May 4, 2026
  • 0 Comments

தமிழகத்தை ஆளப்போவது யார் என்ற வினாவுக்கு இன்று விடை கிடைக்கப்பெறவுள்ளது. வாக்கெண்ணும் நடவடிக்கை இந்திய நேரப்படி இன்று (4) காலை 8 மணிக்கு அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இதற்காக தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. முற்பகல் 11 மணி […]

தமிழ்நாடு

தமிழக தேர்தல் முடிவுகள் இன்று அறிவிப்பு : அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!

  • May 4, 2026
  • 0 Comments

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி ஒரே கட்டமாக நடைபெற்ற நிலையில் இன்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்கள் தயார் நிலையில் உள்ளன. அங்கு  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில்,  காலை 11 மணி முதல் முன்னிலை நிலவரங்கள் தெளிவாக தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ முடிவுகள் மாலை […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் – 10 பேர் உயிரிழப்பு, பலர் காயம்

  • May 3, 2026
  • 0 Comments

உக்ரைன் நாட்டில் கடந்த ஒரு நாளில் ரஷ்யா நடத்திய ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், குறைந்தது 76 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக ஐந்து மாகாணங்களில், ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. உக்ரைன் விமானப்படை தகவலின்படி, ஒரே இரவில் ரஷ்யா 269 ஆளில்லா விமானங்களை ஏவியுள்ளது. அதில் 249 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அல்லது செயலிழக்கச் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 19 ட்ரோன் […]

உலகம் செய்தி

ஈரானின் சமாதானத் திட்டம் என்ன?

  • May 3, 2026
  • 0 Comments

ஈரான் நாடு, அமெரிக்கா அரசிற்கு புதிய சமாதானத் திட்டம் ஒன்றை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திட்டம் பாகிஸ்தான் வழியாக அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சமாதானத் திட்டத்தில் மூன்று முக்கிய கட்டங்கள் உள்ளன. இது 30 நாட்களுக்குள் போர் நிறுத்தத்தை நிலையான அமைதியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதென Al Jazeera தெரிவித்துள்ளது. திட்டத்தின் முக்கிய அம்சமாக, மத்திய கிழக்கில் மீண்டும் போர் ஏற்படாமல் இருக்க அனைத்து தரப்பும், குறிப்பாக இஸ்ரேல் உட்பட,  தாக்குதல் செய்யமாட்டோம் என்று உறுதி […]

உலகம் செய்தி

தெற்கு லெபனானில் 100 க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் கண்டுபிடிப்பு – இஸ்ரேல் ராணுவம் தகவல்

  • May 3, 2026
  • 0 Comments

தெற்கு லெபனான் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 100 க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த ஆயுதங்கள் ஹிஸ்புல்லாஅமைப்பால் பயன்படுத்தப்பட்டவை என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்களில் கலாஷ்னிகோவ் வகை துப்பாக்கிகள், சுமார் 20 ரொக்கெட்டுகள், குறி பார்த்து சுடும் துப்பாக்கிகள்  மற்றும் பிற போர் உபகரணங்கள் அடங்கும். இந்த ஆயுதங்கள் தெற்கு லெபனானின் Rshaf பகுதியில் உள்ள 401 ஆவது படைப்பிரிவின் வீரர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படைப்பிரிவு […]

உலகம்

30 நாட்களுக்குள் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் – ஈரான் முன்மொழிவு!

  • May 3, 2026
  • 0 Comments

ஈரான் 30 நாட்களுக்கு போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அமைதி திட்டம் ஒன்றை முன்மொழிந்துள்ளது. குறித்த 14 அம்ச திட்டத்தில், போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்குப் பதிலாக போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் ஒன்பது அம்சத் திட்டத்திற்கு மறுப்பாக முன்வைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், ஈரான் மீதான தடைகளை நீக்கவும், அதன் கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவரவும், அப்பகுதியிலிருந்து தனது படைகளைத் திரும்பப் பெறவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் லெபனானில் இஸ்ரேல் நடத்தும் போர் உட்பட அனைத்துப் போர் […]

ஐரோப்பா

நேட்டோவின் பிளவு : போலந்து பிரதமர் எச்சரிக்கை!

  • May 3, 2026
  • 0 Comments

பாதுகாப்புச் செலவினங்களை அதிகரிக்க அரசாங்கங்கள் மீது அதிகரித்து வரும் அழுத்தம் காரணமாக, நேட்டோ “தொடர்ச்சியான சிதைவை” சந்தித்து வருவதாக போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் (Donald Tusk) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எக்ஸ் தளத்தில் அவர் இட்டுள்ள பதிவில், முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர், அதிபர் ட்ரம்பிற்கும் ஜெர்மனியின் அதிபர் மெர்ஸிற்கும் ( Merz) இடையே ஏற்பட்ட இராஜதந்திர மோதல், நேட்டோவின் சரிவின் தொடக்கத்தைக் குறிப்பதாகக் குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், […]

இலங்கை செய்தி

மாலைதீவு ஜனாதிபதிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

  • May 3, 2026
  • 0 Comments

மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு, இரண்டு நாள் அரச பயணம் மேற்கொண்டு இன்று (03) பிற்பகல் இலங்கையை வந்தடைந்தார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரிலேயே இவ்விஜயம் இடம்பெறுகின்றது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினரை, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அமோகமாக வரவேற்றார். விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன, வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, […]

இலங்கை செய்தி

காலி சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு 

  • May 3, 2026
  • 0 Comments

காலி சிறைச்சாலையினுள் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இன்று (03.05) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் தப்பியோட முற்பட்ட போது, சிறைச்சாலை அதிகாரிகளினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதான நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் தப்பியோட முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது சிறைச்சாலை அதிகாரிகளால் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில், கைதி ஒருவரின் தோள்பட்டை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. காயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக காலி […]

ஐரோப்பா

பிரித்தானியாவின் பொருளாதார நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பாது!

  • May 3, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்ட பிறகும் கூட, பிரித்தானியாவின் பொருளாதார நிலைமை “இயல்பு நிலைக்குத் திரும்பாது” என்று சர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரித்துள்ளார். இந்நிலையில் பிரித்தானியா ஒரு மாறுப்பட்ட பாதையை” பின்பற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க-இஸ்ரேல் ஈரான் போரின் ஒரு பகுதியாக ஹார்மூஸ் ஜலசந்தி மீதான முற்றுகை உலகெங்கிலும் உள்ள பொருளாதாரங்களை கணிசமாக பாதித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐரோப்பாவுடன் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்துவதன் மூலமும், பசுமை ஆற்றலுக்கு மாறுவதன் மூலமும் பிரிட்டனை “மேலும் […]