பாரிஸில் காரில் மூச்சுத்திணறி உயிரிழந்த சிறுவன் – மூத்த பிரஜைகளுக்கு எச்சரிக்கை
பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் காரில் சிக்கிய மூன்று வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் காரில் உறங்கிக் கொண்டிருப்பதாக எண்ணிய தந்தை அவரை அங்கேயே விட்டுச் சென்றதாகவும் பின்னர் மீண்டும் காருக்கு திரும்பியபோது சிறுவனை சுயநினைவின்றிய நிலையில் மீட்டதாகவும் தெரியவருகிறது.
அதேநேரம் மேலும் 03 சிறுவர்களும் காரில் இருந்து இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை 150 ஆண்டுகளில் முதன்முறையாக பாரிஸில் வெப்பநிலை 40°C-ஐத் தாண்டியுள்ளது. இந்நிலையில் வெப்பம் தொடர்பான மரணங்கள் அதிகரித்துள்ளன.
பிரெஞ்சு அதிகாரிகள் மிக உயர்ந்த அளவிலான சுகாதார சேவைகளைத் திரட்டியுள்ளனர்.
குறிப்பாக 50-70 வயதுடைய குடிமக்கள் இந்த கொடிய வெப்பத்திற்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.




