இலங்கை

இந்திய துணை ஜனாதிபதி நாட்டை வந்தடைந்தார்

  • April 19, 2026
  • 0 Comments

இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தற்போது நாட்டை வந்தடைந்துள்ளார். அவருடன் 49 பேர் கொண்ட தூதுக்குழுவினரும் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளனர். அவர்கள் இன்று (19) இந்திய விமான சேவைக்குச் சொந்தமான ‘INDIA – 01’ ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் வந்தடைந்துள்ளனர்.

உலகம் செய்தி

காசாவில் நீர் விநியோக சாரதிகள் மீது தாக்குதல் – UNICEF கடும் கண்டனம்

  • April 18, 2026
  • 0 Comments

காசாவில் குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு சாரதிகள் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) தெரிவித்துள்ளது. வடக்கு காசாவில் உள்ள மன்சூரா நீர் நிரப்பும் இடத்தில்,  வழக்கமான தண்ணீர் விநியோகப் பணியின் போது இந்தச் சம்பவம் நடந்ததாக UNICEF கூறுகிறது. இதன்போது மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அந்த இடத்தில் நடைபெறும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், முழுமையான விசாரணை நடத்தி […]

இலங்கை செய்தி

பெண்ணின் தலைமுடியை வெட்டி துன்புறுத்தியவர்களுக்கு விளக்கமறியல்

  • April 18, 2026
  • 0 Comments

ராகம பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றினுள் பெண்ணொருவரின் தலைமுடியை வெட்டி, சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட ஐவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதன்படி அவர்கள் எதிர்வரும்  20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (18) வெலிசர பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் பிரதான சந்தேக நபரான ராகம பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய […]

உலகம் செய்தி

ட்ரம்புக்கு நோபல் பதக்கம் வழங்கியதை நியாயப்படுத்தும் வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர்

  • April 18, 2026
  • 0 Comments

வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு நோபல் அமைதிப் பரிசுப் பதக்கத்தை வழங்கியதில் தமக்கு எந்த வருத்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல்  பரிசு பெற்ற மச்சாடோ, ஜனவரி மாதம் வெள்ளை மாளிகையில் டிரம்பைச் சந்தித்தபோது அந்தப் பதக்கத்தை வழங்கியிருந்தார். வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை பதவியில் இருந்து அகற்ற அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கையை வெனிசுலா மக்கள் மறக்கமாட்டார்கள் என்றும் அவர் கூறினார். டிரம்ப், […]

#Putin #RussiaUkraineWar #DroneAttack #Zelenskyy #Russia #Ukraine #WorldNews #BreakingNews #PeaceTalks2025 #Valdai ஐரோப்பா

ரஷ்ய – உக்ரைன் போரில் பெலாரஸ்ய துருப்புகள்!

  • April 18, 2026
  • 0 Comments

நடந்து வரும் மோதலில் தனது நட்பு நாடான பெலாரஸை மீண்டும் ஈடுபடுத்த ரஷ்யா தயாராகி வருவதாக உக்ரைன் அச்சம் வெளியிட்டுள்ளது. உளவுத்துறை அறிக்கையை மேற்கோள்காட்டி உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். பெலாரஸ் எல்லைப் பகுதியில் சாலை கட்டுமானம் மற்றும் பீரங்கி நிலைகள் அமைப்பது குறித்த தகவல்களை உளவுத்துறை மேற்கோள் காட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து தனது நிலத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கத் தயாராக இருப்பதாக பெலாரஸ் தலைமைக்கு எச்சரிக்கை விடுக்க உக்ரைன் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. […]

உலகம் செய்தி

ஆப்பிரிக்க பயணத்தில் போப் லியோ – டிரம்புடனான சர்ச்சைக்கு உறுதியான பதில்

  • April 18, 2026
  • 0 Comments

போப் லியோ XIV, தனது ஆப்பிரிக்கப் பயணத்தின் ஒரு பகுதியாக அங்கோலாவுக்குச் சென்றுள்ளார். அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை அவர் முக்கியமாக எடுத்துக் காட்டவில்லை. 1992ஆம் ஆண்டு இரண்டாம் ஜான் பால் மற்றும் 2009ஆம் ஆண்டு பதினாறாம் பெனடிக்ட் ஆகியோருக்குப் பிறகு அங்கோலாவிற்கு வருகை தரும் மூன்றாவது போப்பாண்டவராக லியோ உள்ளார். அவர் தலைநகர் லுவாண்டாவில் அதிபர் ஜோவோ லோரென்கோவைச் சந்தித்து உரையாற்றவுள்ளார். இந்தப் பயணத்திற்கு முன்பு, கேமரூனில் மூன்று நாட்கள் […]

உலகம் செய்தி

ட்ரம்பின் கருத்துக்கு ஈரானிய அரசியல் வட்டாரங்களில் கடும் எதிர்ப்பு

  • April 18, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள ஈரான் தொடர்பான கருத்துகள், ஈரானிய அரசியல் வட்டாரங்களில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளன. ட்ரம்ப், ஈரானிடமிருந்து முக்கிய சலுகைகள் பெறப்பட்டதாக கூறியதுடன், அணு திட்டம், ஹோர்முஸ்  நீரிணை மற்றும் பொருளாதார தடைகள் குறித்து பல்வேறு கூற்றுகளை வெளியிட்டார். அவரது கூற்றுகளின்படி, குண்டுவீச்சில் சேதமடைந்த அணு தளங்களில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம், இரு நாடுகளும் இணைந்து அகற்றி அமெரிக்காவிற்கு மாற்றப்படும் என்றும், ஈரான் தனது மண்ணில் யுரேனியம் செறிவூட்டுவதை நிறுத்த ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். […]

ஐரோப்பா

04 நாள் வேலை வாரம் – லண்டனில் பணிப்புறக்கணிப்பில் இறங்கும் தொழிற்சங்கம்!

  • April 18, 2026
  • 0 Comments

நான்கு நாள் வேலை வாரத்தை கண்டித்து லண்டன் சுரங்கப்பாதை ஓட்டுநர்கள்,  24 மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த வேலைநிறுத்தம் ஏப்ரல் 21 மற்றும் 23 ஆம் திகதிகளில்  இடம்பெறவுள்ளது. லண்டன் போக்குவரத்துத் துறை (TfL)   நான்கு நாள் வேலை வாரத்தை திணிக்க முயற்சிப்பதாக  RMT தொழிற்சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இருப்பினும் இந்த மாற்றங்கள் தன்னார்வமானவை என்றும், ஒப்பந்த வேலை நேரங்களில் எந்தக் குறைப்பும் இருக்காது என்றும் TfL கூறுகிறது. இந்த முன்மொழிவுகள், ரயில் இயக்குபவர்களுக்கு […]

ஐரோப்பா

இஸ்ரேல் மீது பொருளாதார தடை விதிக்கும் பிரித்தானியா!

  • April 18, 2026
  • 0 Comments

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள நிலங்களை இணைக்கும் இஸ்ரேலின் நகர்வுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இங்கிலாந்தின் எம்பிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். சுமார் 75 எம்பிகள் இணைந்து அவசர நாடாளுமன்றத் தீர்மானத்திற்கு ஆதரவளித்துள்ளனர். ரிச்சர்ட் பர்கனால் (Richard Burgon) முன்வைக்கப்பட்டுள்ள மேற்படி தீர்மானம், பாலஸ்தீன நிலத்தை “அரசு நிலம்” என்று பதிவு செய்வதன் மூலம்  நிலத்தை அபகரிக்கும் இஸ்ரேலின் நடவடிக்கையை கண்டிக்கிறது. இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும், ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தின் மீதான தனது கட்டுப்பாட்டை விரிவுபடுத்துவதை […]

உலகம்

எந்த சமரசமும் செய்ய மாட்டோம் – ஈரான் திட்டவட்டம்!

  • April 18, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் புதிய முன்மொழிவுகளை பரிசீலித்து வரும் அதேவேளை பேச்சுவார்த்தைகளில் சமரசம் இல்லை என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜதந்திர வழிமுறை இருந்தபோதிலும், தனது நிலைப்பாடு உறுதியாக இருப்பதாக ஈரான் வலியுறுத்தியுள்ளது. தனது பேச்சுவார்த்தைக் குழு “சிறிதளவு சமரசம், பின்வாங்கல் அல்லது மென்மை காட்டாது என்றும்,   தேசத்தின் நலன்களைத் தனது முழு பலத்துடன் பாதுகாக்கும்” என்றும் வலியுறுத்தியுள்ளது.  

error: Content is protected !!