ரஷ்ய – உக்ரைன் போரில் பெலாரஸ்ய துருப்புகள்!
நடந்து வரும் மோதலில் தனது நட்பு நாடான பெலாரஸை மீண்டும் ஈடுபடுத்த ரஷ்யா தயாராகி வருவதாக உக்ரைன் அச்சம் வெளியிட்டுள்ளது.
உளவுத்துறை அறிக்கையை மேற்கோள்காட்டி உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
பெலாரஸ் எல்லைப் பகுதியில் சாலை கட்டுமானம் மற்றும் பீரங்கி நிலைகள் அமைப்பது குறித்த தகவல்களை உளவுத்துறை மேற்கோள் காட்டியுள்ளது.
இதனைத் தொடர்ந்து தனது நிலத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கத் தயாராக இருப்பதாக பெலாரஸ் தலைமைக்கு எச்சரிக்கை விடுக்க உக்ரைன் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆள்பற்றாக்குறையை ஈடு செய்யும் விதமான பெலாரஸ்ய துருப்புக்களை ரஷ்யா களமிறக்கவுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




