04 நாள் வேலை வாரம் – லண்டனில் பணிப்புறக்கணிப்பில் இறங்கும் தொழிற்சங்கம்!
நான்கு நாள் வேலை வாரத்தை கண்டித்து லண்டன் சுரங்கப்பாதை ஓட்டுநர்கள், 24 மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த வேலைநிறுத்தம் ஏப்ரல் 21 மற்றும் 23 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
லண்டன் போக்குவரத்துத் துறை (TfL) நான்கு நாள் வேலை வாரத்தை திணிக்க முயற்சிப்பதாக RMT தொழிற்சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இருப்பினும் இந்த மாற்றங்கள் தன்னார்வமானவை என்றும், ஒப்பந்த வேலை நேரங்களில் எந்தக் குறைப்பும் இருக்காது என்றும் TfL கூறுகிறது.
இந்த முன்மொழிவுகள், ரயில் இயக்குபவர்களுக்கு ஒரு கூடுதல் நாள் விடுமுறை அளிக்கவும், நம்பகத்தன்மையை மேம்படுத்தவும், லண்டன் சுரங்கப்பாதையை மற்ற ரயில் இயக்க நிறுவனங்களுடன் ஒருங்கிணைக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளன என்று TfL விளக்கியுள்ளது.




