செய்தி தமிழ்நாடு

தேர்தலில்‌ மக்கள் தங்களின் கோபத்தை தீர்ப்பாக வெளிப்படுத்தியுள்ளார்கள்‌- அன்புமணி அறிக்கை

  • April 24, 2026
  • 0 Comments

திமுக ஆட்சியை அகற்றுவதற்காக மக்கள் திரண்டு வந்து வாக்களித்துள்ளதாக தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி தேர்தலில் மக்கள் தங்களின் கோபத்தை தீர்ப்பாக வெளிப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் 85.12% வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் தேர்தல் வரலாற்றில் இந்த அளவு வாக்குகள் பதிவாகியிருப்பது இதுவே முதன் முறையாகும். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் பெரும் கொந்தளிப்பில் இருந்தனர், திமுக ஆட்சியை அகற்றுவதற்காக திரண்டு வந்து […]

உலகம் செய்தி

போர் நிறுத்த பேச்சு வார்த்தையால் முடங்கிய பாகிஸ்தான் – பொருள் தட்டுப்பாடு, மக்கள் பெரும் சிரமம்

  • April 24, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத் நகரில் முக்கிய  வீதிகள் ஆறாவது நாளாகவும் மூடப்பட்டுள்ளன. இந்நிலை எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து இதுவரை எந்த உத்தியோகபூர்வ தகவலும் வெளியாகவில்லை. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்த நகரம் தயாராகி வருவதாக கூறப்பட்டாலும், இரு தரப்பினரும் இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு இதுவரை அனுமதி அளிக்கவில்லை. வீதிகள் மூடப்பட்டதால் கனரக சரக்கு வாகனங்கள் நகருக்குள் நுழைய முடியாமல் போயுள்ளது. இதனால் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட புதிய விளைபொருட்களின் விநியோகம் […]

இலங்கை செய்தி

திருகோணமலையில் நடைபாதை வியாபாரத்துக்கு தடை!

  • April 24, 2026
  • 0 Comments

திருகோணமலை – மட்டிக்களி பிரதான வீதியில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட திருகோணமலை மாநகரசபை தடை விதித்துள்ளது. குறித்த இடத்துக்கு இன்று (24) விஜயம் மேற்கொண்ட முதல்வர் க.செல்வாஜா உள்ளிட்ட குழுவினர் அப்பகுதியில் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளுடன் கலந்துரையாடி மாற்றிடத்தை வழங்கினர். திருகோணமலை – கண்டி பிரதான வீதியின் மட்டிக்களி பகுதியில் முன்னெடுக்கப்படும் நடைபாதை வியாபாரத்தில் அப்பகுதியில் சன நெரிசல் ஏற்பட்டு, விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையிலேயே அங்கு நடைபாதை வியாபாரத்தை […]

இலங்கை செய்தி

அம்பியூலன்ஸ் சாரதியின் கவயீனத்தினால் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்?

  • April 24, 2026
  • 0 Comments

திருகோணமலை, மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு நோயாளியை ஏற்றிச் சென்ற அம்பியூலன்ஸின் சாரதி அதனை மெதுவாக ஓட்டிச் சென்றுள்ளார் என தேரர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால் பொலிஸ் உத்தியோகத்தரை காப்பாற்ற முடியாமல் போனதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மஹதிவுல்வெவ – தெவனிபியவ இந்ராராம விகாரையின் விகாராதிபதி பொல்ஹேன்கொட உபரத்ன தேரரே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மஹதிவுல்வெவ பிரதேசத்தை சேர்ந்த சுரங்க திஸாநாயக்க என்ற பொலிஸ் உத்தியோகத்தர் மாரடைப்பு காரணமாக கடந்த 19ஆம் திகதி வைத்தியசாலையில் […]

இந்தியா

இது வெறும் தொடக்கம் மட்டுமே: விஜய் அதிரடி பதிவு

  • April 24, 2026
  • 0 Comments

தமிழக தேர்தலில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சற்று முன்னர் அவர் தன் முகநூல் பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும், வணக்கம். அரசியல் என்பது ஏதோ அசகாய சூரர்களுக்கானது மட்டுமே. அதீத அனுபவசாலிகளுக்கானது மட்டுமே. பதவிகளை அனுபவிப்பவர்களுக்கானது மட்டுமே. இப்படி அரசியலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தியும் கட்டுப்படுத்தியும் வைத்தவர்களின் மாயாஜாலக் கணக்குகள், சாதாரண வெகுஜன மக்களால் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன. அரசியலைக் […]

பொழுதுபோக்கு

அதிரும் சரிகமப மேடை: திணரும் நடுவர்கள்!

  • April 24, 2026
  • 0 Comments

ஜீ தமிழில் சரிகமப நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்த வாரம் One On One சுற்று நடைபெறவுள்ளது. போட்டியாளர்கள் நேருக்கு நேர் மோதவுள்ளனர். ஒவ்வொரு போட்டியாளர்களும் அதிரடியாக பாடிடுவது ப்ரோமோவில் காண்பிக்கப்படுகின்றது. பேய் மாதிரி பாடுவதாக நடுவர் ஸ்ரீனிவாஸ் கூறுகின்றார் . அது மட்டும் இல்லை இவர்களின் அதிரடியான திறமையை பார்த்து யாருக்கு ஓட்டு போடுவது என்ற குழம்பத்தில் இருப்பதாக நடுவர் சரண் குறிப்பிடுகின்றார். இதையெல்லாம் பார்க்கும் போது இந்த […]

உலகம் செய்தி

ஈரான் ஆபத்தான நாடாக மாறக்கூடும்!

  • April 24, 2026
  • 0 Comments

ஈரானுடன் மேற்கொள்ளப்படும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் அணுசக்தி நிபுணர்களின் பங்களிப்பு அவசியம் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார கொள்கை தலைவர் Kaja Kallas வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பிய தலைவர்களின் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். துறைசார் நிபுணர்களின் பங்களிப்பு இல்லாமல் எட்டப்படும் எந்தவொரு ஒப்பந்தமும் முந்தைய 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தை விட பலவீனமாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அணுசக்தி விவகாரங்களுடன் சேர்த்து ஈரானின் ஏவுகணைத் திட்டங்கள் மற்றும் நிழல் யுத்த நடவடிக்கைகள் போன்ற பிராந்தியப் பாதுகாப்பு […]

இலங்கை

​ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

  • April 24, 2026
  • 0 Comments

லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியை முறையற்ற வகையில் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் விடுவிக்க வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (24) வத்தளை நீதவான் காஞ்சனா என். சில்வா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்போது, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை 25,000 ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான நான்கு சரீரப் […]

பொழுதுபோக்கு

படத்தின் கதை மாற்றப்பட்டதால் விலகினார் நயன்தாரா!

  • April 24, 2026
  • 0 Comments

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டார் என போற்றப்படும் நயன்தாரா, பாலகிருஷ்ணா படத்திலிருந்து விலகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் நடிகர் பாலகிருஷ்ணா புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். இதில் நாயகியாக நயன்தாரா நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. எனினும், முதலில் தொடங்கவிருந்த வரலாற்று படத்தின் பட்ஜெட் அதிகமாக இருந்ததால், படத்தின் கதையினை படக்குழுவினர் மாற்றிவிட்டார்கள். தற்போது புதிய கதை முடிவாகி படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனிடையே பல்வேறு படங்களில் நடித்து வருவதாலும், கதை மாற்றத்தாலும் பாலகிருஷ்ணா படத்திலிருந்து விலகும் […]

இலங்கை

மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண் – குற்றவாளிக்கு வலைவீச்சு!

  • April 24, 2026
  • 0 Comments

பாலங்கொடவின் பல்லேவெல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பெண் ஒருவரின்  சடலம்  கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து சடலம் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பல்லேவெல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனியாக இருந்த இந்தப் பெண் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாலங்கொட பிரதம நீதிபதி, நீதித்துறை மருத்துவ கண்காணிப்பாளர், குற்ற நிகழ்வு விசாரணை அதிகாரிகள் மற்றும் கைரேகை பிரிவு அதிகாரிகள் நேற்று (23) பிற்பகல் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு […]

error: Content is protected !!