பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா காலமானார்!
பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா உடல்நலக் குறைவினால் இன்று (28) அதிகாலை 3 மணியளவில் சென்னையில் காலமானார். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு தனது இசைப்பாடல்களால் வலுச் சேர்த்த தேனிசை செல்லப்பா கடந்த 21ஆம் திகதி தனது 85 வது பிறந்த நாளை கொண்டாடியிருந்தார். 1980களில் இருந்து தமிழீழ தேசிய விடுதலைக்காக தனது இசைப்பாடல்களால் உழைத்தவர் தேனிசை செல்லப்பா. 1990ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், முற்றவெளியில் தொடங்கி, தமிழர் தாயகப் பகுதிகளில் எழுச்சிப் பாடல் இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தார். புலம்பெயர் தேசங்களிலும் […]













