உலகம் செய்தி

அமெரிக்காவின் அணுகுமுறை குறித்து ரஷ்யாவிடம் முறையிட்ட ஈரான்!

அமெரிக்காவின் அதிகப்படியான கோரிக்கைகளே அமைதி பேச்சு தோல்வியடையக் காரணம் என்று ரஷ்ய ஜனாதிபதியிடம், ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி நேற்று சந்தித்து பேச்சு நடத்தியபோதே வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, ஈரானிய துறைமுகங்கள் மீதான தடையை நீக்கினால் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கத் தயாராக இருப்பதாகவும் ஈரான் ஒரு புதிய திட்டத்தை முன்மொழிந்துள்ளது.

இது பற்றி ரஷ்ய தரப்புக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேற்படி திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி தனது பாதுகாப்பு ஆலோசகர்களுடன் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறார்.

அணுசக்தி திட்டம் குறித்த விவாதங்களைத் தள்ளிவைத்துவிட்டு, தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண ஈரான் முயற்சித்துவருகின்றது.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!