ஐரோப்பா

ரஷ்யா ட்ரோன் ஊடுருவல்களுடன் நேட்டோவை சோதிக்கிறது : போலந்து

  • September 15, 2025
  • 0 Comments

போலந்து வெளியுறவு அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி, கடந்த வாரம் போலந்து வான்வெளியில் நுழைந்த ரஷ்ய ட்ரோன்கள், முழு அளவிலான போரைத் தூண்டாமல் நேட்டோவின் பதிலடியைச் சோதிக்கும் நோக்கம் கொண்டவை என்று கூறினார். சுவாரஸ்யமாக அவை அனைத்தும் முட்டாள்தனமானவை, இது ரஷ்யா போரைத் தொடங்காமல் நம்மைச் சோதிக்க முயன்றது என்பதைக் குறிக்கிறது என்று சிகோர்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து நாளிதழான தி கார்டியனிடம் கூறினார். சுமார் 19 ட்ரோன்களில் மூன்று அல்லது நான்கு மட்டுமே சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகு போலந்தின் […]

மத்திய கிழக்கு

காசாவில் பல உயரமான கட்டிடங்களை குறி வைத்த இஸ்ரேல் – தொடரும் தீவிர தாக்குதல்

  • September 15, 2025
  • 0 Comments

நேற்று காசா நகரில் பல உயரமான கட்டிடங்களை இஸ்ரேலிய இராணுவம் குறி வைத்து தாக்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார ஆரம்பத்தில் நகரத்தில் உள்ள மக்கள் முழுமையாக வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன் பின்னர், இடம்பெற்ற பாரிய தாக்குதலில் இதுவும் ஒன்றாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களால் பல இலட்சம் பாலஸ்தீன மக்கள் அவல நிலைக்கு உள்ளாகியுள்ளனர். இந்தநிலையில் காசா மீதான இந்த தாக்குதல்களுக்கு மத்தியில், ஹமாஸினால் பிடித்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளின் பாதுகாப்பு குறித்து இன்று […]

பொழுதுபோக்கு

பிரபல தமிழ் நடிகர் சென்னைக்குள் வர தடை…

  • September 15, 2025
  • 0 Comments

தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக நடிகர் அஜய் வாண்டையார் உள்ளிட்ட 5 பேர் சென்னைக்குள் வர தடை விதிக்கப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பார் ஒன்றில் அண்மையில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக, சில மாதங்கள் முன்பாக அதிமுக ஐடி விங் முன்னாள் நிர்வாகி அஜய் வாண்டையார் மற்றும் பிரசாந்த், சுனாமி சேதுபதி, தூண்டில் ராஜா ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அஜய் வாண்டையார் மீது ஏற்கெனவே அடிதடி தகராறு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் […]

இலங்கை

சிகிரியாவின் கண்ணாடிச் சுவரைச் சேதப்படுத்திய பெண் – அதிரடியாக கைது செய்த பொலிஸார்

  • September 15, 2025
  • 0 Comments

சிகிரியாவிலுள்ள கண்ணாடிச் சுவரில் பெண் ஒருவர் தனது பெயரை எழுதிச் சேதப்படுத்தியுள்ளார். இதனால் குறித்த பெண் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் கொண்டை ஊசி மூலம் ஆறு ஆங்கில எழுத்துகளை எழுதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட பெண் அவிசாவளையைச் சேர்ந்த 21 வயதுடையவர் ஆவார். குறித்த பெண் நண்பர்கள் குழுவுடன் சிகிரியாவை பார்வையிட சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட பெண்ணை இன்று தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.

செய்தி

2025 ஆம் ஆண்டில் கூகிளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை தொடர்பில் வெளியான தகவல்

  • September 15, 2025
  • 0 Comments

கூகிளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக “YouTube” பெயரிடப்பட்டுள்ளது. உலகளவில் மாதத்திற்கு 1.38 பில்லியன் தேடல்களைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்த மிகவும் பிரபலமான தேடல்கள் “chatgpt” மற்றும் “facebook” ஆகும், ஒவ்வொன்றும் 618 மில்லியன் மாதாந்திர தேடல்களைக் கொண்டுள்ளன. குறிப்பாக, ஒரு AI கருவி இப்போது உலகின் மிகப்பெரிய சமூக வலைப்பின்னல்களில் ஒன்றின் தேடல் பிரபலமாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள முதல் 100 கூகிள் தேடல்கள் மற்றும் கூகிள் தேடப்பட்ட கேள்விகளின் தரவை Semrush […]

இன்றைய முக்கிய செய்திகள் மத்திய கிழக்கு

இஸ்ரேலை தண்டிக்கவேண்டும் – உலக நாடுகளிடம் கட்டார் விடுத்த கோரிக்கை

  • September 15, 2025
  • 0 Comments

உலக நாடுகள் அவற்றின் இரட்டை நிலைப்பாட்டை நிறுத்திக்கொண்டு இஸ்ரேலைத் தண்டிக்கவேண்டும் என்று கட்டார் கோரிக்கை விடுத்துள்ளது. அரபு, முஸ்லிம் தலைவர்கள் உச்சநிலைச் சந்திப்பை நடத்தவிருக்கும் வேளையில் கட்டார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்-தானி கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ருபியோ (Marco Rubio) இஸ்ரேலியத் தலைவர்களைச் சந்திக்கும் வேளையில் அரபு உச்சநிலைச் சந்திப்பும் இடம்பெறுகிறது. சென்ற வாரம் கட்டாரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு எதிராகத் ஒற்றுமையை வெளிப்படுத்த அரபுத் தலைவர்கள் கூடுகின்றனர்.

பொழுதுபோக்கு

சூதாட்ட செயலியால் சிக்கல் : வசமாக சிக்கும் பிரபல நடிகை ஊர்வசி ரவுடேலா

  • September 15, 2025
  • 0 Comments

ஆன்லைன் சூதாட்ட தளமான 1xBet தொடர்பான பணமோசடி வழக்கில், பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலாவையும், முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மிமி சக்ரவர்த்தியையும் அமலாக்கத்துறை (ED) சம்மன் அனுப்பி அழைத்துள்ளது. ஆன்லைன் சூதாட்ட செயலிகளில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அதை நம்பி பயன்படுத்திய பலர் கடன் நெருக்கடிக்கு உள்ளாகி, தற்கொலை செய்யும் அவல நிலை தொடர்ந்து வருகிறது. இதையடுத்து ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் சட்டத்தை அண்மையில் மத்திய அரசு நிறைவேற்றியது. முன்னதாக ஆன்லைன் சூதாட்ட […]

வாழ்வியல்

கூன் விழுவதன் காரணம் – மருத்துவர் விளக்கம்

  • September 15, 2025
  • 0 Comments

வயதாகும்போது தங்கள் உயரத்தில் சில அங்குலங்கள் குறைவது அல்லது உடலில் கூனல் விழுவது அல்லது குனிந்த முதுகு ஏற்படுவது போன்ற பிரச்னையை சில முதியோர் சந்திக்கின்றனர். ஆனால், இதை பலரும் தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை. இதை முதுமையின் இயல்பான ஒரு பகுதியாகவே கருதி அலட்சியம் செய்துவிடுவார்கள். ஒரு குறுகிய காலத்தில் 1.5 அங்குலம் (4 செ.மீ) உயரம் குறைந்தால், அது வெறும் முதுமையின் பாதிப்பல்ல. குனிந்த அல்லது கூன் விழுந்த தோற்றத்துடன் கூடிய திடீர் (கவனிக்கத்தக்க அளவிற்கு) […]

அறிவியல் & தொழில்நுட்பம்

AI வரவு – 99% வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயம்

  • September 15, 2025
  • 0 Comments

ஏஐ வரவால் 2030ஆம் ஆண்டுக்குள் 99% வேலைவாய்ப்பு பறிபோகும் என அமெரிக்க பேராசிரியர் கணித்துள்ளார். அமெரிக்காவின் கென்டகியில் உள்ள லூயிஸ்வில்லி பல் கலைக்கழகத்தின் கணினி அறி வியல் பேராசிரியர் ரோமன் யம் போல்ஸ்கி கூறியதாவது: உலகெங்கிலும் உள்ள நிறுவ னங்கள் செலவுகளை குறைத்து வருவாயை பெருக்க ஏஐ அமைப்பை விரைவாக செயல் படுத்தி வருகின்றன. இப்போது நாம் இதுவரை கண்டிராத வேலை யின்மை உலகை காண்கிறோம். 10 சதவீத வேலையின்மையை பற்றி நாம் பேசவில்லை. அனை வரையும் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் மெல்போர்னில் புதிதாக நடப்பட்ட 500,000 மரங்கள்

  • September 15, 2025
  • 0 Comments

மெல்போர்னை பசுமையான மற்றும் வாழக்கூடிய நகரமாக மாற்ற விக்டோரியன் அரசு ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. மெல்போர்ன் முழுவதும் 500,000 புதிய மரங்களை நடுவதற்கு இந்தத் திட்டத்திற்கு 9.5 மில்லியன் டொலர் செலவாகும். திட்டமிடல் அமைச்சர் சோனியா கில்கென்னி கலந்து கொண்ட ஆர்டீர் தெற்கு தொடக்கப்பள்ளியில் நடந்த ஒரு பட்டறையின் போது சுற்றுச்சூழல் அமைச்சர் ஸ்டீவ் டிமோபௌலோஸ் புதிய திட்டங்களை அறிவித்தார். ஆர்டீர் தெற்கு தொடக்கப்பள்ளி ஏற்கனவே 1,800 க்கும் மேற்பட்ட மரங்களை நடுவதற்கு பங்களித்துள்ளது, இது […]