ஆசியா

அணு ஆயுத ஒழிப்பை வாஷிங்டன் கைவிட்டால், வட கொரியா-அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை சாத்தியம் ; கிம்

  • September 23, 2025
  • 0 Comments

அணு ஆயுத ஒழிப்பில் வாஷிங்டன் தனது அக்கறையைக் கைவிட்டு, வட கொரியாவுடன் அமைதியான சகவாழ்வை நாடினால், அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை தொடங்க முடியும் என்று கொரிய ஜனநாயக மக்கள் குடியரசின் உயர்மட்டத் தலைவர் கூறினார். கொரிய தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளரும், வட கொரியாவின் அரசு விவகாரத் தலைவருமான கிம் ஜாங் உன், வட கொரியாவின் 14வது உச்ச மக்கள் சபையின் 13வது அமர்வின் இரண்டாவது நாளில் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் […]

தென் அமெரிக்கா

மாயமான 02 கொலம்பிய இசைக்கலைஞர்களின் உடல்கள் கண்டெடுப்பு!

  • September 23, 2025
  • 0 Comments

கடந்த வாரம் காணாமல் போனதாகக் கூறப்படும் இரண்டு கொலம்பிய இசைக்கலைஞர்களின் உடல்கள் மெக்சிகோ நகரத்திற்கு வெளியே கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பி-கிங் என்று அழைக்கப்படும் பாடகர் பேய்ரான் சான்செஸ் சலாசர் மற்றும் டிஜே ரெஜியோ க்ளோன் என்று அழைக்கப்படும் ஜார்ஜ் லூயிஸ் ஹெர்ரெரா ஆகியோரின் உடல்களே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளன. இரண்டு நண்பர்களும் செப்டம்பர் 16 அன்று மெக்சிகோ நகரத்தின் உயர்நிலை போலான்கோ பகுதியில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்திற்குச் சென்றிருந்த நிலையில் மாயமாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் போதைப்பொருள் […]

பொழுதுபோக்கு

கர்ப்பமாக இருப்பதை அறிவித்த கத்ரீனா கைஃப் – விக்கி கௌஷல் ஜோடி

  • September 23, 2025
  • 0 Comments

தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் நடிகை கத்ரீனா கைஃப். பாலிவுட்டின் நட்சத்திர ஜோடியான கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் ஜோடி தங்கள் கர்ப்பம் குறித்த செய்திகளை சீக்ரெட்டாக வைத்திருந்த நிலையில், அண்மையில் கத்ரீனாவின் போட்டோ ஒன்று வெளியாகி வைரலானது. அதைப்பார்த்த நெட்டிசன்கள் அவர் கர்ப்பமாக இருக்கிறாரா என்று கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது அவரே தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்து இருக்கிறார். கத்ரீனா தனது மகப்பேறு போட்டோஷூட் மூலம் தான் கர்ப்பமாக […]

பொழுதுபோக்கு

திருமணம் குறித்த கேள்விக்கு எஸ்.ஜே சூர்யாவின் தக் லைஃவ் பதில்

  • September 23, 2025
  • 0 Comments

வாலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, பின் குஷி எனும் மாபெரும் ஹிட் படத்தை கொடுத்தவர் எஸ்.ஜே. சூர்யா. இயக்குநராக இரண்டு ஹிட் படங்களை கொடுத்துவிட்டு, பின் தானே ஹீரோவாகவும் நடிக்க துவங்கினார். ஒரு காலகட்டத்திற்கு பின் சில ஆண்டுகள் சினிமாவிலிருந்து விலகி இருந்தார். இசை படத்தின் மூலம் கம்பேக் கொடுத்து தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். மான்ஸ்டர், ஸ்பைடர், இறைவி என தொடர்ந்து தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். குறிப்பாக வில்லன் கதாபாத்திரத்தில் இவர் நடித்தாலே அந்த […]

பொழுதுபோக்கு

விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஸ்பெஷல் தீபாவளி

  • September 23, 2025
  • 0 Comments

தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது. இயக்குநர் ஹெச். வினோத் சமீபத்தில் இப்படம் குறித்து பேசும்போது கூட, “பக்கா மாஸ் படம், விஜய் சார் ரசிகர்களுக்கு Full மீல்ஸ்” என கூறியிருந்தார். இது படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க செய்துள்ளது. இந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று […]

உலகம்

நியூயார்க் உயர்மட்ட மாநாட்டில் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக அறிவித்த ஐரோப்பிய நாடுகள்

  • September 23, 2025
  • 0 Comments

நியூயார்க்கில் உள்ள ஐ.நா.பொதுச் சபையின் ஓரத்தில் திங்களன்று நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தின் போது, ​​பல ஐரோப்பியத் தலைவர்கள் தங்கள் நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக அறிவித்தனர். காசாவில் போரை முடிவுக்குக் கொண்டு வந்து இரு-நாடு தீர்வை முன்னெடுப்பதற்கான ஒரு வரலாற்று நடவடிக்கையாக இந்த நடவடிக்கையை வடிவமைத்தனர். பாலஸ்தீனப் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு மற்றும் இரு-நாடு தீர்வை செயல்படுத்துவதற்கான உயர் மட்ட சர்வதேச மாநாடு என முறையாகப் பெயரிடப்பட்ட பிரான்ஸ் மற்றும் சவுதி அரேபியா தலைமையிலான சர்வதேச மாநாடு, காசாவில் […]

ஆசியா

ரகாசா புயல் எச்சரிக்கை – பாடசாலைகளை மூடிய சீன அரசாங்கம்!

  • September 23, 2025
  • 0 Comments

ரகாசா புயல் காரணமாக சீன அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாடசாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களையும் மூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு சுமார் 137 மைல் (220 கிமீ) வேகத்தில் காற்று வீசுவதுடன், சில இடங்களில் மழை பெய்யும் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இந்த புயலானது தெற்கு சீன பொருளாதார சக்தியாக இருக்கும் குவாங்டாங் மாகாணத்தின் கடற்கரையை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஹாங்காங்கின் ஆய்வகம் தெரிவித்துள்ளது. குவாங்டாங்கில் உள்ள ஜுஹாய் மற்றும் ஜான்ஜியாங் […]

இந்தியா

கேரள-தமிழ்நாடு எல்லையில் தென்பட்ட அரிய வகை வெள்ளை அணில்

  • September 23, 2025
  • 0 Comments

அரிதினும் அரிய காட்சியாக, கேரள – தமிழக மாநிலங்களின் எல்லைப் பகுதியான வெள்ளரடாவிற்கு அருகில் சித்தாறு பகுதியிலுள்ள ஒரு மரத்தின் கிளையில் வெண்ணிற அணில் காணப்பட்டது. அப்பகுதியிலுள்ள அரசுப் பள்ளி ஒன்றின் ஆசிரியராகப் பணிபுரியும் சுமேஷ் என்பவர் அதனைப் படம்பிடித்தார். பல ஆண்டுகளாகவே சுமேஷ் அவ்வட்டாரத்தின் பல்லுயிர்ச்சூழலைக் கண்காணித்து வருகிறார். அத்துடன், இயற்கை மரபுடைமையைப் பாதுகாத்து ஆவணப்படுத்தும் அமைப்பான திருவனந்தபுரம் ஷோலா இயற்கைச் சமூகத்திலும் அவர் உறுப்பினராக இருக்கிறார். ‘லூசிசம்’ (leucism) எனும் அரியவகை மரபணு நிலைமையால், […]

வாழ்வியல்

பாத வெடிப்பும் – தீர்வும்! தற்காத்து கொள்ள சில எளிய வழிமுறைகள்

  • September 23, 2025
  • 0 Comments

நமது உடலில் ஏற்படும் பிரச்னைகளில் பொதுவாக சந்திக்கக் கூடிய ஒன்று பாத வெடிப்பு. பாத வெடிப்பு என்பது அனைவருக்கும் ஏற்படக்கூடியதாகும். பாதங்களை சரியாக பராமரிக்காததாலும், சருமத்தில் ஈரப்பதம் குறைவதாலும் விரிசல் ஏற்பட்டு பாதவெடிப்பு உண்டாகிறது. அதிலும் குறிப்பாக, பெண்களே அதிக அளவில் பாத வெடிப்பு பிரச்னையை சந்திக்கின்றனர். பாதங்களில் ஈரப்பதத்தை பாதுகாத்து பாதவெடிப்பு பிரச்னையிலிருந்து தற்காத்து கொள்ள சில எளிய கை வைத்தியங்களைத் தெரிந்து கொள்வோம்: வாழைப்பழம் வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்துள்ளதால் சருமத்தில் […]

இலங்கை

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை

  • September 23, 2025
  • 0 Comments

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோரின் இணக்கப்பாட்டுடன் உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட இந்த தீர்மானத்தை வழங்கியுள்ளார். நீதிமன்ற அவமதிப்புக்காக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரதிவாதியான ஹர்ஷ இலுக்பிட்டிய இந்தச் சட்டத்தின் மூலம் கடுமையான நீதிமன்ற அவமதிப்பைச் செய்துள்ளதாக நீதிபதி கூறினார். […]

error: Content is protected !!