சிந்துவெளி எழுத்து புதிரை விடுவிப்பவர்களுக்குபரிசு தொகை அறிவித்த மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு இன்று முதல் மூன்று நாட்களுக்கு சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் நடைபெறுகிறது. இந்த நிலையில் சிந்துவெளி நூற்றாண்டு கருத்தரங்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் . மேலும், சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பினை உலகுக்கு அறிவித்த மேனாள் இந்தியத் தொல்லியல் துறையின் தலைமை இயக்குநர் சர் ஜான் ஹீபர்ட் மார்ஷல் திருவுருவச்சிலைக்கு மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் . தொடர்ந்து […]













