ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவை உலுக்க தயாராகும் காட்டுத்தீ – மக்களுக்கு அவசர எச்சரிக்கை

  • November 29, 2024
  • 0 Comments

மெல்போர்ன் உட்பட ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் கோடை காலத்தில் கடுமையான காட்டுத் தீ நிலைகள் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கோடை காலத்துடன் தொடர்புடைய காட்டுத் தீ நிலைமைகள் தொடர்பான அறிக்கையை தீயணைப்பு மற்றும் அவசர சேவைக்கான தேசிய சபை வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. விக்டோரியா மாகாணத்தில் உள்ள மெல்போர்ன் உட்பட ஆஸ்திரேலியாவின் தெற்குப் பகுதிகள் கடுமையான காட்டுத் தீயை எதிர்கொள்ளும் என்றும், ஆஸ்திரேலியாவின் மத்தியப் பகுதியும் காட்டுத் தீ நிலைமை காரணமாக பாதிக்கப்படும் என்றும் அந்த அறிக்கை […]

செய்தி மத்திய கிழக்கு

போர் நிறுத்தம் மீறல் – தாக்குதலை நடத்திவிட்டு இஸ்ரேல் வெளியிட்ட அறிவிப்பு!

  • November 29, 2024
  • 0 Comments

தெற்கு லெபனானின் ஆறு பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக லெபனானின் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியாகி சில மணிநேரங்களில் ஹெஸ்பொல்லாவுடனான போர் நிறுத்தம் மீறப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் லெபனானின் ஆயுதக் குழுவான ஹெஸ்பொல்லாவுக்கும் இடையிலான போர் நிறுத்தம் நேற்று முன்தினம் அமுல்படுத்தப்பட்டது. அமெரிக்கா மற்றும் பிரான்ஸின் தரகு ஒப்பந்தத்தின் கீழ் இந்த ஒப்பந்தம் அமுல்படுத்தப்பட்டது. கடந்த 14 மாத காலமாக நீடித்த போரினால் பாதிப்படைந்த இரு நாடுகளின் மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்புவதை […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

தமிழக கடற்கரையை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு நிலை : மழையுடனான வானிலை குறைவடைய வாய்ப்பு!

  • November 29, 2024
  • 0 Comments

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவும் ஆழமான காற்றழுத்த தாழ்வுநிலையானது இன்று (29)  இலங்கையின் வானிலையில் அதன் தாக்கத்தை படிப்படியாக குறைக்கும் என நம்பப்படுகிறது. இன்று காலை வெளியிடப்பட்ட சமீபத்திய வானிலை முன்னறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி  தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நேற்று (28) இரவு 11.30 மணியளவில் திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 240 கிலோமீற்றர் தொலைவிலும் காங்கேசன்துறைக்கு கிழக்கே 290 கிலோமீற்றர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம்  அறிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் […]

மத்திய கிழக்கு

மழை வேண்டி சவூதி அரேபியாவில் கூட்டு பிராத்தனைக்கு அழைப்பு!

  • November 29, 2024
  • 0 Comments

சவூதி அரேபியாவின் மன்னர், நாடு முழுவதும் உள்ள குடிமக்களை மழை வேண்டி பிரார்த்தனையில் பங்கேற்குமாறு வலியுறுத்தியுள்ளார். தாமதமான மழை மற்றும் வறட்சிக்கு மத்தியில் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சலாத் அல் இஸ்திஸ்கா எனப்படும் மழை வேண்டி செய்யப்படும் பிரார்த்தனையில் பங்கேற்குமாறு நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்களுக்கு மன்னர் சல்மான் பின் அப்துல் அசிஸ் அல் சவுத் அழைப்பு விடுத்துள்ளார். இந்த மாத தொடக்கத்தில்   வளைகுடா நாட்டின்  பாலைவனத்தில் பனிப்பொழிவு ஏற்பட்ட போதிலும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டது. அரபிக்கடலில் […]

ஐரோப்பா

பிரான்ஸில் வேலை தேடுவோரின் எண்ணிக்கையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

  • November 29, 2024
  • 0 Comments

பிரான்ஸில் வேலை தேடுவோரின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, வேவை தேடுவோரின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளதாக பிரான்ஸில் வேலை தேடுவோருக்கு உதவும் France Travail அமைப்பு அறிவித்துள்ளது. வேலை தேடுவோரில் எந்த செயற்பாடுகளும் இல்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை கடந்த செப்டம்பர் மாதத்தில் 1.8% சதவீதத்தால் அதிகரித்துள்ளது. தற்போது பிரான்ஸில் A பிரிவில் 3.1 மில்லியன் பேர் தங்களை பதிவு செய்துள்ளனர். அதேவேளை, குறைந்தபட்ச செயற்பாடுகளில் பிரிவு B மற்றும் C எண்ணிக்கை 5.46 மில்லியனாக உள்ளது. […]

செய்தி

ஜெர்மனியில் வாகன சாரதிகள் தொடர்பில் அமுலுக்கு வரம் புதிய நடைமுறை

  • November 29, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் வயதானவர்கள் வாகனம் செலுத்தக் கூடிய தகுதியில் உள்ளார்களா என்பதை குறித்து பரிசீலனை செய்யப்படவுள்ளது. ஜெர்மனியில் வயதானவர்களால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த நடைமுறையை அமுல்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 70 வயதிற்கு மேற்பட்ட சாரதிகளுக்கு தகுதிகாண் பரீட்சைககக்கு உட்படுத்த வேண்டும் என வாகனம் தொடர்பில் அனுபவங்கள் மிக்க அமைப்புக்கள் கோரியுள்ளன. இதேவேளை, ஜெர்மனியில் வாகன அனுமதி பத்திரம் பெறும் போது முதற்தடவையில் 60 வீதமானவர்கள் தேர்ச்சி பெறுவதில்லை என புதிய புள்ளிவிபரங்கள் வெளியாகி […]

ஐரோப்பா

ஸ்காட்லாந்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட 132 ஆண்டு பழைமையான போத்தல் : மறைத்துவைக்கப்பட்டிருந்த செய்தி!

  • November 29, 2024
  • 0 Comments

தெற்கு ஸ்காட்லாந்தில் உள்ள கலங்கரை விளக்கத்தின் சுவர்களுக்கு இடையில் 132 ஆண்டுகள் பழைமையான போத்தல் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. ரைன்ஸ் ஆஃப் காலோவேயின் வடக்கு முனையில் அமைந்துள்ள கோர்ஸ்வால் லைட்ஹவுஸில் இந்த போத்தல் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த போத்தலுக்குள் செப்டம்பர் 4, 1892 என திகதியிடப்பட்ட செய்தி ஒன்றும் காணப்பட்டுள்ளது. அதில் 100 அடி (30 மீட்டர்) கோபுரத்தில் புதிய வகை விளக்குகளை நிறுவிய மூன்று பொறியாளர்களின் பெயர்கள், கலங்கரை விளக்கத்தின் மூன்று காவலர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. […]

ஐரோப்பா

ஐரோப்பா செல்வதற்காக கடத்தல்காரர்களின் பிடியில் சிக்கும் மக்கள் : பாதியில் பறிப்போகும் உயிர்!

  • November 29, 2024
  • 0 Comments

ஆங்கிலக் கால்வாயை கடக்கும் முயற்சில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளை அடையும் முயற்சியில் பலர் ஆங்கிலக் கால்வாய் ஊடாக பயணித்து தங்களுக்கு உயிரை தியாகம் செய்கின்றனர். அந்தவகையில் கடத்தல்காரர்கள் ஒரு டிங்கி படகில் 70 பேரை ஏற்றிக்கொண்டு பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.  இதன்போது படகில் இருந்து இடரிவிழுந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏற்கனவே சிறிய படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் மக்களுக்கு மிகவும் ஆபத்தானது. ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபரங்களின்படி […]

ஆசியா செய்தி

தென் கொரியாவில் 100 ஆண்டுகளுக்கு பிறகு கடும் பனிப்பொழிவு – 200 விமானங்கள் இரத்து

  • November 29, 2024
  • 0 Comments

தென் கொரியாவின் தலைநகரான சியோலில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக 200க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தாமதமாகியுள்ளன. 1907ஆம் ஆண்டுக்குப் பிறகு சியோலில் ஏற்பட்ட மிக மோசமான பனிப்பொழிவு இதுவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவுடன் பலத்த காற்றும் மழையும் பெய்து வருகிறது. இதன்படி, மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமை, மின்சாரம் துண்டிக்கப்படுதல் மற்றும் வீதித் தடைகள் போன்றவற்றால் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல், இந்த பேரிடர் […]

ஐரோப்பா

ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை பயன்படுத்த திட்டமிடும் ரஷ்யா : மிரட்டும் புட்டின்!

  • November 29, 2024
  • 0 Comments

ஜனாதிபதி விளாடிமிர் புடின் ரஷ்யாவின் புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் கெய்வில் உள்ள முக்கிய மையங்களை தாக்கவுள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார். உக்ரைனின் எரிசக்தி கட்டடத்தை மொஸ்கோ தாக்கிய நிலையில் பல மில்லியன் மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். உயர் மட்ட சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்ட நிலையில் மக்கள் பதுங்கு குழிக்குள் அடைகலம் தேடியுள்ளனர். இந்நிலையிலேயே புட்டினின் மிரட்டல் வந்துள்ளது. ஏறக்குறைய மூன்று ஆண்டுகால யுத்தம் சமீபத்திய நாட்களில் கூர்மையான விரிவாக்கத்தைக் கண்டுள்ளது. ஜனவரி மாதம் அமெரிக்க […]