கோர தாண்டவம் ஆடிய ரஷ்யா : கீவ் மீது ஏவுகணை தாக்குதல்!
ரஷ்ய படைகள் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை கீவ் மீது ஆளில்லா விமானம் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கொண்டு ஒரு பெரிய அளவிலான ஒருங்கிணைந்த தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
இதனால் பல இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டதுடன், கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.
இந்தத் தாக்குதல் பல கட்டங்களாக நிகழக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்த நிலையில், குடியிருப்பளர்கள் பலர் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
குறிப்பாக இந்த தாக்குதல்களில் கீவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஷெவ்சென்கிவ்ஸ்கி (Shevchenkivskyi ) மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அங்கு ஹோட்டல் ஒன்று தீவிபத்துக்கு உள்ளாகியுள்ளது. அத்துடன் குறித்த பகுதியில் உள்ள 03 வீடுகளும் தீவிபத்துக்கு உள்ளானதாக ஆளுனர் கிளிட்ச்கோ அறிவித்துள்ளார்.
மேலும் அடுக்குமாடிக் குடியிருப்பொன்று இடிந்து விழுந்ததாகவும், அதில் மக்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




