இலங்கை

இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு விசேட உதவித் தொகை! அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

அஸ்வெசும பெறும் பெற்றோர்களது மற்றும் விசேட காரணங்களுக்காக சிறுவர் இல்லங்களில் உள்ள பிள்ளைகளுக்காக பாடசாலை புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு 6,000 ரூபா உதவித்தொகை ஒன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் பாடசாலை தவணையில் இருந்து இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.   இது தொடர்பில், பிரதமரால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு நேற்று (02) அனுமதி கிடைத்ததாக ஆளும் கட்சியின் பிரதான கொறடா அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பொருளாதார நெருக்கடியின் பாதகமான விளைவுகளால், பாடசாலை மாணவர்களின் கல்வியில் கணிசமான […]

ஆஸ்திரேலியா இன்றைய முக்கிய செய்திகள்

ஆஸ்திரேலியாவில் திடீரென  இரத்தமாக மாறிய கடல் நீர் : குழப்பத்தில் ஆய்வாளர்கள்!

  • December 3, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரின் துறைமுகம் ஒன்றில் கடல் நீர் இளம் சிவப்பாக மாறியதை தொடர்ந்து குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய செல்வந்த புறநகர்ப் பகுதியான கிரிபில்லியில் உள்ள  இவ்வாறு கடல் நீர் மாற்றமடைந்துள்ளது. கடல் நீர் இவ்வாறு திடீரென மாற்றமடைந்தமை தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது நியூ சவுத் வேல்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையமும் (EPA) விசாரணைகளில் பங்கெடுத்துள்ளனர். கோட்பாடு அளவிலான பதில்களை அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் பிலுர்ஸ்ஸின் காரணமாக இந்நிலை ஏற்பட்டிருக்கலாம் […]

இந்தியா

மின்னஞ்சல் மூலம் தாஜ்மகாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • December 3, 2024
  • 0 Comments

தாஜ்மகாலை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கவிருப்பதாக அடையாளம் தெரியாத சிலர் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர்.அந்த மின்னஞ்சல் உத்தரப் பிரதேச மாநிலச் சுற்றுலாத் துறைக்கு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 3) அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மோப்ப நாய்களுடன் காவல்துறையினரும் வெடிகுண்டு செயலிழப்புப் படையினரும் தாஜ்மகாலிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உடனடிச் சோதனையை மேற்கொண்டனர். “சுற்றுலாத் துறைக்கு வந்த மின்னஞ்சலில் தாஜ்மகாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்தப் பகுதியில் நாங்கள் முழுமையாகச் சோதனை மேற்கொண்டோம். இருப்பினும், வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை,” என்று […]

இலங்கை

காணாமல் போன நபரை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவி கோரும் இலங்கை பொலிஸார்

2024 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி முதல் மத்தேகொட பிரதேசத்தில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் 68 வயதுடைய நபரைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். காணாமல் போன நபரின் மனைவி வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் மத்தேகொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த நபர் தொடர்பில் தகவல் அறிந்த பொதுமக்கள் 071-8592207 மற்றும் 011-2783776 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இலங்கை

SJB உறுப்பினரால் தாக்கப்பட்ட அர்ச்சுனா : சபையில் குற்றச்சாட்டு!

  • December 3, 2024
  • 0 Comments

யாழ்.மாவட்ட சுயேட்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா , எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்குச் சென்றபோது, ​​SJB பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேராவால் தாக்கப்பட்டதாக தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர், ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பியபோது, ​​எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு தனது பாராளுமன்ற உரைக்கு ஒதுக்கப்பட்ட நேரம் குறித்து விசாரிப்பதற்காக சென்றதாக அவர் கூறினார். “பாராளுமன்ற வளாகத்திற்குள் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால், நாங்கள் எப்படி தெருவில் நடமாட முடியும்?’ என்று கேள்வி எழுப்பினார். இந்த விடயம் தொடர்பில் சபாநாயகரிடம் முறைப்பாடு […]

பொழுதுபோக்கு

விஜய் செய்தது மாபெரும் தவறு – இவரா மக்களுக்கு நல்லது செய்யப் போகிறார்?

  • December 3, 2024
  • 0 Comments

கடந்த சில நாட்களாகவே பெய்து வந்த கனமழையின் காரணமாக, சென்னையின் அனேக இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. திருவண்ணாமலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்த சோகமும் அரங்கேறி உள்ளது. தொடர்ச்சியாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 300 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கிட்டத்தட்ட 500 மில்லி மீட்டர் மழை வெறும் 3 நாட்களில் பதிவாகியுள்ள நிலையும் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் தமிழக அரசு உடனடியாக 2000 […]

இலங்கை

இலங்கை- அமைச்சர்களுக்கு இனி அரசு பங்களாக்கள் இல்லை: எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதிகள் முன்னர் பயன்படுத்திய 344 சொகுசு வாகனங்களை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது, அவை ஏலம் விடப்பட அல்லது மீண்டும் பயன்படுத்தப்பட உள்ளன. தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகளை குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அமைச்சர்களுக்கு அரச பங்களாக்களை ஒதுக்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஒருவர் நேற்று தெரிவித்தார். கூடுதலாக, பாரம்பரியமாக ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வரியில்லா வாகன அனுமதிகள் நிறுத்தப்படும். கடந்த அரசாங்கங்களில் அமைச்சர்களுக்கு […]

ஆப்பிரிக்கா இன்றைய முக்கிய செய்திகள்

கண்ணில் இருந்து இரத்தம் வழியும்  புதிய வைரஸ் : மக்களை எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!

  • December 3, 2024
  • 0 Comments

குரங்கம்மை வைரஸைத் தொடர்ந்து ஆப்பிரிக்காவை உலுக்கி வரும் மற்றுமோர் வைரஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தற்போது ஆப்பிரிக்க நாடுகளில் ப்ளீடிங் ஐ வைரஸ் என்ற நோய் பரவி வருகிறது. குறிப்பாகக் கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் பாதிப்பு மிக மோசமாக இருக்கிறது. இதனால் ருவாண்டாவில் மட்டும் சுமார் 15 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த  இரண்டு மாதங்களில் மட்டும் இது 17 ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பரவியுள்ளது. இந்நிலையில் பிரேசில், கென்யா, ருவாண்டா, காங்கோ, உகாண்டா, பொலிவியா உள்ளிட்ட […]

இலங்கை

இலங்கையில் 7வது மாடியில் இருந்து குதித்து விபரீத முடிவெடுத்த அவுஸ்திரேலிய பிரஜை

  • December 3, 2024
  • 0 Comments

அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் ( 51) கொள்ளுப்பிட்டி கிரெஸ்கட் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து செவ்வாய்க்கிழமை (03) குதித்து தன்னுயிரை மாய்த்துக்கு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரட்டைக் குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர் கட்டிடத்தின் 7வது மாடியில் தற்காலிகமாக தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியா இன்றைய முக்கிய செய்திகள்

பங்களாதேஷ் தூதரகத்துக்குள் அத்துமீறி புகுந்த 7 பேர் இந்திய பொலிசாரால் கைது!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் வங்காளதேச துணை தூதரகத்திற்குள் புகுந்து சொத்துகளை சேதப்படுத்தியதாக இந்து குழுவை சேர்ந்த ஏழு பேரை போலீசார் கைது செய்து அவர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளனர். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பங்களாதேஷ் தூதரகத்தின் பிரதான வாயிலை சேதப்படுத்தியதாகவும், சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும், தேசியக் கொடியை அவமதித்ததாகவும் கூறி, அதற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அழைப்பு விடுத்த சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த வாரம் பங்களாதேஷ் இந்து […]