மத்திய கிழக்கு

போர்நிறுத்த ஒப்பந்தம் ; இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

  • December 3, 2024
  • 0 Comments

கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே நடந்து வரும் மோதலில் பலர் உயிரிழந்து உள்ளனர். இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் லெபனானில் 3,800க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். இதனை லெபனானின் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது. இந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவலை அமெரிக்க அதிபர் பைடன் வெளியிட்டார். லெபனானில் நடந்து வரும், ஈரான் […]

பொழுதுபோக்கு

சுதா – சிவாவுக்கு இடையில் மோதல்! SK 25 ஷூட் கேன்சல்?

  • December 3, 2024
  • 0 Comments

சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தின் அதிரி புதிரியான வெற்றியைத் தொடர்ந்து அவர் கைவசம் தற்போது மூன்று படங்கள் தயாராகி வருகின்றன. அதில் எஸ்.கே.23 திரைப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. அடுத்தபடியாக அவர் நடிக்க உள்ள எஸ்.கே.24 திரைப்படத்தை டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளார். இதுதவிர சிவகார்த்திகேயனின் 25-வது படத்தை சூரரைப்போற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா இயக்க உள்ளதாக கூறப்பட்டது. சுதா கொங்கரா – சிவகார்த்திகேயன் கூட்டணியில் […]

ஆசியா

பிலிப்பைன்ஸில் கடல் ஆமைகளை உணவாக உட்கொண்ட மக்கள் : இறுதியில் காத்திருந்த ஆபத்து!

  • December 3, 2024
  • 0 Comments

பிலிப்பைன்ஸில் அழிந்து வரும் கடல் ஆமை ஒன்றிலிருந்து தயாரிக்கப்பட்ட ஸ்டூவை சாப்பிட்டதால் 3 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் குறைந்தது 32 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது. Maguindanao del Norte மாகாணத்தில் உள்ள ஒரு கடலோர நகரத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. கடந்த வாரம் இந்த உணவை சாப்பிட்ட பிறகு டஜன் கணக்கான பழங்குடி டெடுரே மக்கள் வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் வயிற்றுப் பிடிப்பு போன்ற அறிகுறிகளை அனுபவிக்கத் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிலிப்பைன்ஸின் சுற்றுச்சூழல் […]

இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்களுடன் 01 இந்திய மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணம் வெத்தலகேணிக்கு அப்பால் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இவர் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். குறித்த மீன்பிடி படகு சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டி சுமார் 30 கடல் மைல் தூரம் கடந்து இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்துள்ளது. இந்திய மீனவர்களுடன் கைப்பற்றப்பட்ட படகு காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, சட்ட […]

இன்றைய முக்கிய செய்திகள் கருத்து & பகுப்பாய்வு

ஏலியன்கள் செவ்வாய் கிரகத்தில் வாழ்கின்றனவா : யூகத்தை ஏற்படுத்திய புதிய ஆய்வு!

  • December 3, 2024
  • 0 Comments

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்திருக்க கூடும் என்ற யூகத்தை ஆய்வாளர்கள் முன் வைக்கின்றனர். ஆண்ட்ரியா புட்டுரினி தலைமையிலான விஞ்ஞானிகள் குழு அவ்வாறு நம்புகிறது. அவரின் கூற்றுப்படி, அசிடாலியா பிளானிஷியாவின் பண்டைய செவ்வாய் சமவெளி நுண்ணுயிர் வாழ்க்கைக்கான சாத்தியமான புகலிடமாக இருக்கலாம். குறிப்பாக மெத்தனோஜென்கள், மேற்பரப்பிற்கு அடியில் ஆழமாக பதுங்கியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவானது 4.3 முதல் 8.8 கிலோமீட்டர் ஆழத்தில் உள்ள ஒரு மேற்பரப்பு மண்டலத்தை அடையாளம் கண்டுள்ளது. அங்கு நுண்ணுயிர்களின் செயல்பாட்டை ஆதரிக்கும் சாத்தியமான […]

வட அமெரிக்கா

இஸ்ரேலிய பிணைக்கைதிகள் தொடர்பில் ஹமாஸுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

  • December 3, 2024
  • 0 Comments

தான் அமெரிக்க அதிபராக பதவியேற்பதற்கு முன்பாகவே காசாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார். இது குறித்து டொனால்ட் ட்ரம்ப் தனது சொந்த சமூக வலைதளமான ட்ரூத் சோஷியல் தளத்தில் கூறியிருப்பதாவது, மத்திய கிழக்கில் மிகவும் வன்முறையான, மனிதாபிமானமற்ற முறையிலும், ஒட்டுமொத்த உலக நாடுகளின் விருப்பத்திற்கு எதிராகவும் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால் அவை எல்லாம் வெறும் பேச்சளவிலேயே இருக்கிறது. எந்த நடவடிக்கையும் […]

பொழுதுபோக்கு

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 : முக்கிய நபர் தூக்கிட்டு தற்கொலை செய்ததால் அதிர்ச்சி

  • December 3, 2024
  • 0 Comments

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. 2 மாதங்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் தற்போது 17 போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சி சக்சஸ்புல்லாக நடைபெற்று வருவதற்கு முக்கிய காரணம் அதில் உள்ள போட்டியாளர்கள் மட்டுமல்ல, அதற்கு பின்னணியில் உழைக்கும் ஊழியர்களும் தான். பிக்பாஸ் நிகழ்ச்சி 20 போட்டியாளர்களை வைத்து நடத்தப்பட்டாலும் அவர்களை கண்காணிக்கு நூற்றுக்கணக்கான கேமராக்கள் உள்ளன. அதை நிர்வகிக்க தனி டீம், இயக்குனர்கள், […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

உலக சந்தையின் நிலைமையை பொறுத்து மாற்றம் : இலங்கையில் எரிவாயு விலை குறித்து வெளியான அறிவிப்பு!

  • December 3, 2024
  • 0 Comments

இலங்கையில் மாதாந்த எரிவாயு விலை திருத்தத்தின் பிரகாரம் டிசம்பர் மாத விலை திருத்தம் நாளை (04) அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் தற்போது நிலவும் எரிவாயு விலையுடன் ஒப்பிட்டு இந்த ஆண்டு எரிவாயுவின் விலை திருத்தம் செய்யப்படவுள்ளதாக பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதாகவும், அதற்கேற்ப இந்த நாட்டில் எரிவாயு விலையில் அதிகரிப்பு ஏற்பட வேண்டும் எனவும், ஆனால் எரிவாயுவின் விலையை ஸ்திரமான நிலையில் பேணுவதற்கான பேச்சுவார்த்தைகள் […]

ஆசியா

தென்கொரியாவில் எழுந்துள்ள புதிய சிக்கல் : தீர்க்க முடியாமல் போராடும் அரசு!

  • December 3, 2024
  • 0 Comments

தென் கொரியா இதுவரை இல்லாத வகையில் கருவுறுதல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அங்கு மக்கள் தொகை படுவேகமாக சரியும் நிலையில், அதைச் சரி செய்ய முடியாமல் தென்கொரிய அரசு போராடி வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் தென்கொரியா என்ற நாடே இல்லாத சூழல் கூட உருவாகும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இப்போது தென்கொரிய 5.2 கோடி மக்கள்தொகையுடன் வலுவாக இருந்தாலும் இந்தாண்டு இறுதிக்குள் அது 1.7 கோடியாகக் குறையும் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலைமையை சரிசெய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை […]

இலங்கை

இலங்கையில் சட்டவிரோதமாக பள்ளிவாசல் ஒன்றில் தங்கியிருந்த 08 இந்தோனேஷிய பிரஜைகள் கைது

  • December 3, 2024
  • 0 Comments

விமான அனுமதிப்பத்திரம் மற்றும் விசா இன்றி நுவரெலியாவில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தங்கியிருந்த இந்தோனேசிய பிரஜைகள் 08 பேர் சந்தேகத்தின் பேரில் திங்கட்கிழமை (02) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பள்ளிவாசலுக்கு சென்று குறித்த பிரஜைகளிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது அவர்கள் இரண்டு மாதங்களுக்கு முன்னர் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்ததாகவும் விசாவை புதுப்பிப்பதற்காக அனைத்து ஆவணங்களையும் இலங்கையில் உள்ள தூதரகத்திடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். கைது […]