இந்தியா

மின்னஞ்சல் மூலம் தாஜ்மகாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தாஜ்மகாலை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கவிருப்பதாக அடையாளம் தெரியாத சிலர் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர்.அந்த மின்னஞ்சல் உத்தரப் பிரதேச மாநிலச் சுற்றுலாத் துறைக்கு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 3) அனுப்பப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மோப்ப நாய்களுடன் காவல்துறையினரும் வெடிகுண்டு செயலிழப்புப் படையினரும் தாஜ்மகாலிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உடனடிச் சோதனையை மேற்கொண்டனர்.

“சுற்றுலாத் துறைக்கு வந்த மின்னஞ்சலில் தாஜ்மகாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்தப் பகுதியில் நாங்கள் முழுமையாகச் சோதனை மேற்கொண்டோம். இருப்பினும், வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை,” என்று உதவி காவல் ஆணையர் சையது அரீப் செய்தியாளர்களிடம் கூறினார்.

“மின்னஞ்சலில் போலி மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது,” என்றார் அவர்.

இதன் தொடர்பில் தாஜ்மகால் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரைக் கண்டுபிடிக்க, காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே