செய்தி மத்திய கிழக்கு

ஐக்கிய அரபு எமிரேட் அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணிகளைச் செய்ய அனுமதி

  • April 16, 2024
  • 0 Comments

பாதகமான காலநிலை மாற்றங்கள் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஊழியர்கள் இன்று (16) முதல் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. அனைத்து அரசு ஊழியர்களும் பணியிடத்தில் உடல் ரீதியாக இருக்க வேண்டிய பதவிகளைத் தவிர, வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதித்துள்ளது. நாட்டின் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கைகளுக்கு அமைய இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிப்புற வேலைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டால், சுகாதாரம் மற்றும் […]

ஆசியா செய்தி

பிலிப்பைன்ஸில் $230 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் கண்டுபிடிப்பு

  • April 16, 2024
  • 0 Comments

பிலிப்பைன்ஸ் 1.8 டன் கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைனைக் கைப்பற்றியுள்ளது என்று ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் தெரிவித்துள்ளார். இந்த அளவு ஒரு சாதனை மற்றும் போதைப்பொருள் போருக்கு “சரியான அணுகுமுறை” என்று விவரித்தார். மணிலாவின் தெற்கே படங்காஸ் மாகாணத்தில் ஒரு வேன் சோதனையின் போது $230 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள சட்டவிரோத போதைப்பொருட்களை போலீசார் கண்டுபிடித்தனர். டிரைவர் கைது செய்யப்பட்டார். மார்கோஸ் போதைப்பொருள் கடத்தலை ஆய்வு செய்தார், மேலும் இது பிலிப்பைன்ஸில் “எப்போதும் பிடிபட்ட ஷாபுவின் மிகப்பெரியது” என்று கூறினார். […]

இலங்கை செய்தி

ஈஸ்டர் தாக்குதல் குறித்து வேண்டுகோள் விடுத்த இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்

  • April 16, 2024
  • 0 Comments

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மைகளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளில் வெளிப்படுத்தவேண்டும் எனவும் காலநீடிப்பு இல்லாமல் விரைவாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று மட்டக்களப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்தியா இலங்கைக்கு முக்கியமானது நாடு எனவும் அந்த உறவில் விரிசல்கள் ஏற்படாத வகையில் எமது செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை செய்தி

கொழும்பில் சுற்றுலா பயணியிடம் கடுமையாக நடந்துகொண்ட நபருக்கு ஏற்பட்ட நிலை

  • April 16, 2024
  • 0 Comments

வௌிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரிடம் கடுமையாக நடந்துக் கொண்ட நபர் தெரு உணவு விற்பனையாளர்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த தினம் வௌிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு இடியப்ப கொத்து ஒன்றின் விலை 1,900 ரூபாய் என சந்தேகநபர் குறிப்பிடும் நிலையில், இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணி விலை அதிகமாக இருப்பது பற்றி கடை உரிமையாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அவர் விருப்பம் இருந்தால் வாங்குங்கள். இல்லையென்றால் சென்று விடுங்கள் என கடை உரிமையாளர் […]

செய்தி விளையாட்டு

IPL Match 31 – தனி நபராக அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற பட்லர்

  • April 16, 2024
  • 0 Comments

ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் ஆடின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் களம் இறங்கினர். இதில் சால்ட் 10 ரன்னிலும் அடுத்து வந்த ரகுவன்ஷி 30 ரன்னிலும் அவுட் ஆகினர். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நரேன் […]

செய்தி வட அமெரிக்கா

நீதிமன்றத்தில் தூங்கியதாக டொனால்ட் டிரம்ப் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

  • April 16, 2024
  • 0 Comments

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், வணிக ஆவணங்களை பொய்யாக்கிய குற்றச்சாட்டிற்காக நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிமன்றத்தில் அவர் தூங்குவது போலவும், கண்களைத் திறக்க முடியாமல் திணறுவது போலவும் தோன்றியது. இணையத்தில் பலர் அவருக்கு “ஸ்லீப்பி டான்” மற்றும் “டான் ஸ்னோரெலியோன்” போன்ற புனைப்பெயர்களை வழங்கினர். ஊடக செய்தியாளர் மேகி ஹேபர்மேன், சம்பவம் நடந்த நீதிமன்ற அறையில் உட்கார அனுமதிக்கப்பட்ட ஒரு சில பத்திரிகையாளர்களில் ஒருவர். ஹேபர்மேன் இணையதளத்தில், “ட்ரம்ப் தூங்குவது போல் தெரிகிறது. அவரது தலை […]

இலங்கை செய்தி

யாழில் புத்தாண்டு தினத்தில் நிறைவெறியில் அட்டகாசம்

  • April 16, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) போதையில் குழப்பங்களை ஏற்படுத்தி மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தாண்டு தினத்தை முன்னிட்டு , யாழ்.பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இசைநிகழ்வில் போதையில் , குழப்பங்களை ஏற்படுத்தி மோதலில் ஈடுபட்டதாக கூறப்படும் வன்முறை கும்பலைச் சேர்ந்த 7 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் விசாரணைகளின் பின்னர் சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி மருத்துவ பரிசோதனையை மேற்கொண்ட பின்னர் யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை […]

பொழுதுபோக்கு

சீரியல்களை துவம்சம் செய்ய வருகின்றார் திருமுருகன்… 2ம் பாகம் ரெடி

  • April 16, 2024
  • 0 Comments

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர் ஓரளவு நல்ல டிஆர்பியை பெற்று வருகிறது. இதை எப்படியாவது முந்த வேண்டும் என்பதற்காக விஜய் டிவி பல யுக்திகளை கையாண்டு வருகிறது. இந்நிலையில் எதிர் நீச்சலையே தும்சம் செய்யும் அளவிற்கு சன் டிவியில் மற்றொரு சீரியல் இறங்க இருக்கிறது. திருமுருகனின் சூப்பர் ஹிட் சீரியலின் இரண்டாம் பாகமாக வர இருக்கிறது. இது ரசிகர்களுக்கு மிகவும் இன்ப அதிர்ச்சியாக உள்ளது. அதாவது சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டிஒலி, நாதஸ்வரம் என்ற […]

இலங்கை செய்தி

தமிழர்களை பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்துவது நாட்டை அழிவுக்குள்ளாக்கும் – அருட்தந்தை சத்திவேல்

  • April 16, 2024
  • 0 Comments

தமிழர்களை தொடர்ந்தும் பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்தி செய்ய முற்படும் அரசியல் நாட்டின் எதிர்காலத்தை மேலும் அழிவுக்குள்ளேயே தள்ளும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால்வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,அரச பயங்கரவாதம் தமிழர் தரப்பில் பேரினவாதத்தின் கைக்கூலிகளாக செயற்பட்டோரை தவிர ஏனைய அனைத்து தமிழர்களையும் தொடர்ந்து பயங்கரவாதிகளாகவே பார்க்கிறது என்பதை எழுத்தாளரும் கவிஞருமான தீபச்செல்வன் அவர்களை அண்மையில் […]

ஐரோப்பா செய்தி

வரலாற்றாசிரியருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த இத்தாலி பிரதமர் மெலோனி

  • April 16, 2024
  • 0 Comments

“இதயத்தில் நவ நாஜி” என்று குறிப்பிட்ட வரலாற்றாசிரியருக்கு எதிராக பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தாக்கல் செய்த புதிய அவதூறு வழக்குக்கு இத்தாலிய நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. 81 வயது இடதுசாரி கிளாசிக் கலைஞர் லூசியானோ கன்ஃபோரா, ஏப்ரல் 2022 இல் தெற்கு இத்தாலியின் பாரியில் ஒரு பள்ளி விவாதத்தின் போது வரலாற்றுத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பிரதர்ஸ் ஆஃப் இத்தாலியின் தலைவர் பதவியேற்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு கருத்து தெரிவித்தார். வழக்கு விசாரணை அக்டோபர் 7-ம் தேதி […]