ஆசியா

இஸ்ரேலிய கிளவுட் ஒப்பந்தத்தை எதிர்த்த 28 ஊழியர்களை பணிநீக்கம் செய்த கூகுள்

இஸ்ரேலிய அரசாங்கத்துடனான நிறுவனத்தின் கிளவுட் ஒப்பந்தத்திற்கு எதிரான போராட்டங்களில் சில ஊழியர்கள் பங்கேற்றதை அடுத்து 28 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததாக கூகிள் தெரிவித்துள்ளது. ஒரு சில குறிப்பிடப்படாத அலுவலக இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்கள் உள்ளே நுழைந்து பணியை சீர்குலைத்ததாக ஆல்பாபெட் பிரிவு கூறியது . “மற்ற ஊழியர்களின் பணியை உடல் ரீதியாக தடை செய்வது மற்றும் எங்கள் வசதிகளை அணுகுவதைத் தடுப்பது எங்கள் கொள்கைகளின் தெளிவான மீறல் மற்றும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத […]

வட அமெரிக்கா

அமெரிக்காவுக்குள் சட்டவிரோத நுழைவு… கஸ்டடியில் இருந்த இந்தியர் மரணம்!

  • April 18, 2024
  • 0 Comments

இந்தியாவைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் (57), கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தபோது கைது செய்யப்பட்டார். அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் கைது செய்யப்பட்ட அவர், குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறையின் கஸ்டடியில் வைக்கப்பட்டிருந்தார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பாக அட்லாண்டாவில் வைத்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், அட்லாண்டாவின் செயின்ட் மேரிஸ் நகரில் உள்ள தென்கிழக்கு ஜார்ஜியா சுகாதார நிலையத்தில் கடந்த 15ம் திகதி ஜஸ்பால் சிங் மரணம் அடைந்துள்ளார். அவர் மரணம் அடைந்த […]

இலங்கை

இலங்கை : குடும்பத்தினருடன் காசல்ரி நீர்த்தேகத்திற்கு சென்ற மாணவருக்கு நேர்ந்த துயரம்!

  • April 18, 2024
  • 0 Comments

காசல்ரி நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். காசல்ரீ தோட்டத்தில் வசிக்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே காணாமல் போயுள்ளார். இந்த பாடசாலை மாணவன் தனது குடும்ப உறுப்பினர்களுடன் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற போதே இவ்விபத்தில் சிக்கியுள்ளார். காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பிரதேசவாசிகள் மற்றும் மீனவர்களுடன் இணைந்து குழந்தையின் சடலத்தை கண்டுபிடிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பாதுகாப்பு […]

இலங்கை

மன்னார் – செட்டிக்குளம் பகுதியில் யானைகளால் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிப்பு!

  • April 18, 2024
  • 0 Comments

செட்டிக்குளம் மன்னார் வீதியில் அமைக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு கம்பங்களை காட்டு யானைகள் அடித்து நொருக்கி சேதப்படுதிய சம்பவம் இன்று (18.04) அதிகாலை இடம்பெற்றுள்ளது. வவுனியா செட்டிக்குளம் மன்னார் வீதியில் பறையனாளங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு இரண்டு கிலோமீற்றர் முன்பாக டயலொக் மற்றும் மொபிட்டல் தொடர்பாடல் வலையமைப்பினரால் அமைக்கப்பட்ட பதினாறு தொலைத்தொடர்பு கம்பங்களை யானைகள் உடைத்து துவம்சம் பண்ணியுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்று திருத்தல் பணிகளை மொபிட்டல் தொடர்பாடல் வலையமைப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். அண்மை காலங்களாக காட்டு யானைகள் மக்கள் குடியிருப்பு […]

இந்தியா

ஜார்கண்ட் – பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பழங்குடி இளைஞர் பலியான சோகம்!

  • April 18, 2024
  • 0 Comments

ஜார்கண்ட் மாநிலம், கோட்டா மாவட்டத்தில் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில், 30 வயது பழங்குடி இளைஞர் உயிரிழந்தார். ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் இருந்து 350 கி.மீ. தொலைவில் உள்ள படா டங்கா பாரா பகுதியைச் சேர்ந்த ஹரி நாராயண் பஹாரியா. இவர் நேற்று பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். இதுதொடர்பாக, பொலிஸார் கூறிய தகவல்படி, கடந்த 16ம் திகதி, சுந்தர் பஹாரி பொலிஸில் மிரட்டி பணம் பறித்தல் தொடர்பாக ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக பொலிஸார், […]

இலங்கை

முல்லைத்தீவு – கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம்

  • April 18, 2024
  • 0 Comments

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (18.04.2024) பிற்பகல் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புதுக்குடியிருப்பு கைவேலி மயில்குஞ்சன் பகுதியை சேர்ந்த 33 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு காயமடைந்துள்ளார். குறித்த நபர் தமது வீட்டிலிருந்து தேவிபுரம் (ஆ) பகுதியிலுள்ள காட்டுப் பகுதியால் சென்ற போது விலங்குகளை வேட்டையாடுவதற்காக பயன்படும் கட்டுத்துவக்கு வெடித்துள்ளது. இதனால் காயமடைந்த அவர் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் […]

இலங்கை

மட்டக்களப்பில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண் : தீவிர விசாரணையில் பொலிஸார்!

  • April 18, 2024
  • 0 Comments

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவிற்குள் அடங்கும் பாலமுனை கடற்கரையோரம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாலமுனை கடற்கரையோரம் கரை ஒதுங்கிய குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர். சுமார் 55 வயது மதிக்கத்தக்க குறித்த பெண் எவ்வாறு மரணமானார் என்பது குறித்த விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் குறித்த பெண்ணின் சடலம் தற்போது காத்தான்குடி பாலமுனை கடற்கரை ஓரம் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் பணத்திற்கு விற்கப்படும் விசாக்கள்? – உள்துறை அலுவலக ஊழியரின் மோசடி அம்பலம்

  • April 18, 2024
  • 0 Comments

வடக்கு அயர்லாந்தில் வசிக்கும் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவருக்கு பிரித்தானிய வதிவிட உரிமத்தை (விசா) விற்க முயன்றதாக சந்தேகத்தின் பேரில் உள்துறை அலுவலக வழக்குப் பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பணியாளர் புகலிடக் கோரிக்கையாளரைத் தொடர்புகொண்டு தனது அகதி விண்ணப்பத்தை அங்கீகரிப்பதற்காக 2,000 பவுண்ட் கேட்டதாகக் கூறப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மூத்த பணியாளர் அந்த நபரைத் தொடர்பு கொண்டதாகக் கூறப்படும் மோசடி முயற்சியின் ஒரு பகுதியாக முக்கியமான உள்துறை அலுவலகப் பதிவுகள் பயன்படுத்தப்பட்டதாகக் […]

இலங்கை

செவ்வாய் கிரகத்தின் ஆய்வு பணிக்காக நாசாவில் இணையும் இலங்கை பெண்!

  • April 18, 2024
  • 0 Comments

செவ்வாய் கிரகத்தின் ஆய்வுக்காக நடத்தப்பட்ட ஆராய்ச்சிக்காக இலங்கை விஞ்ஞானி ஒருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தில் நாசாவால் கட்டப்பட்ட செவ்வாய் கிரகத்தின் சுற்றுச்சூழல் பண்புகள் கொண்ட ஒரு வாழ்விடத்தில் தொடர்புடைய பணி மேற்கொள்ளப்படுகிறது. பணிக்கு நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஜேசன் லீ, ஸ்டெபானி நவரோ, ஷெரீப் அல் ரொமைதி மற்றும் பியூமி விஜேசேகர என்ற இலங்கை விஞ்ஞானி ஆவார். அவர்கள் மே 10 ஆம் திகதி […]

ஐரோப்பா

சுவிஸில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய தடை : பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்!

  • April 18, 2024
  • 0 Comments

சுவிஸ் பாராளுமன்றத்தின் கீழ் சபை செனட் சபையில் இனவெறி சின்னங்களை பயன்படுத்துவதையோ, அல்லது பொதுவில்  காட்சிப்படுத்துவதையோ தடைசெய்யும் நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவு  பல ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை கடந்த பாராளுமன்ற அமர்வில் தோல்வி கண்டது. பெரும்பாலான அரசியல் குழுக்கள் இந்த நடவடிக்கையை ஆதரித்துள்ளதுடன்,  இரு அவைகளிலும் அதிக இடங்களைக் கொண்ட வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சியின் எதிர்ப்பை முறியடித்தன. ஐரோப்பா முழுவதிலும் யூத எதிர்ப்புத் தாக்குதல்களின் எழுச்சியை அடுத்து, இந்த இந்த […]