இலங்கை : குடும்பத்தினருடன் காசல்ரி நீர்த்தேகத்திற்கு சென்ற மாணவருக்கு நேர்ந்த துயரம்!
காசல்ரி நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
காசல்ரீ தோட்டத்தில் வசிக்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே காணாமல் போயுள்ளார்.
இந்த பாடசாலை மாணவன் தனது குடும்ப உறுப்பினர்களுடன் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற போதே இவ்விபத்தில் சிக்கியுள்ளார்.
காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பிரதேசவாசிகள் மற்றும் மீனவர்களுடன் இணைந்து குழந்தையின் சடலத்தை கண்டுபிடிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எச்சரிக்கையை புறக்கணித்து எகொட மெகொட நீர்த்தேக்கத்தை நீந்திக் கொண்டிருந்த போதே இந்த நீர் விபத்து இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.