இலங்கை : கெஹலியவின் விளக்கமறியல் நீட்டிப்பு!
தரமற்ற இம்யூனோகுளோபுலின் குப்பிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் தொடர்புடைய முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 07 பேரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) பெப்ரவரி 02 ஆம் திகதி நீதிமன்ற உத்தரவிற்கு இணங்க அங்கு வந்த போது, தரமற்ற மனித நரம்பு வழி இம்யூனோகுளோபுலின் (ஐவிஐஜி) கொள்வனவு தொடர்பில் ரம்புக்வெல்லவைக் கைது செய்தது. அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு […]













